How to Look Younger Naturally in Tamil
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களை எப்போதும் இளமையாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஒரு பெரிய ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக தங்களின் முகத்தை தான் அழகாக வைத்து கொள்ள வேண்டு என்று அனைவருமே ஆசைப்படுவார்கள். ஏனென்றால் நமது முகத்தை பார்த்து தான் நமது வயதை மற்றவர்கள் கணிப்பார்கள். அதனால் தான் நாம் அனைவருமே நமது வயது நமது முகத்தில் தெரியக்கூடாது என்று நினைத்து நமது முகத்தை என்றும் இளமையாக வைத்து கொள்ள பலவ கையான முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதாவது பலவகையான கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். எவ்வளவு தான் கிரீம்களை வாங்கி பயன்படுத்தினாலும் அது ஒரு கால கட்டத்திற்கு மேல் உங்களுக்கு பயனளிக்காமல் போய்விடும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்களின் முகத்தை என்றும் இளமையாக வைத்து கொள்ள உதவும் ஒரு சில குறிப்புகளை பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to make Face Look Younger Home Remedies in Tamil:
இயற்கையான முறையில் உங்களின் முகத்தை இளமையாக வைத்து கொள்ள உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
தேங்காய் எண்ணெய்:
சுத்தமான தேங்காய் எண்ணெய் நமது உடல் நலத்திற்கும், சருமத்திற்கும் மிகவும் உதவியாக இருக்கின்றது. அதே போல் நாம் என்றும் இளமையாக இருப்பதற்கும் இந்த தேங்காய் எண்ணெய் மிகவும் உதவுகின்றது.
அதாவது 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 1/2 டீஸ்பூன் திராட்சை விதை எண்ணெய் அல்லது மாதுளை விதை எண்ணெயையும் சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து பின்னர் உங்களின் முகத்தை கழுவி கொள்ள வேண்டும்.
அவகேடோ:
அவகேடோவும் நமது முகத்தை இளமையாக பராமரிக்க மிகவும் உதவுகிறது. அதாவது பாதியளவு அவகேடோவின் ஓட்ஸ் சேர்த்து அரைத்து உங்களின் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து உங்களின் முகத்தை வெதுப்வெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி கழுவி கொள்ளுங்கள்.
உங்களின் முகம் என்றும் இளமையாக காட்சி அளிக்க வேண்டுமா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
வெந்தயம்:
வெந்தயமும் நமது சருமத்தை என்றும் இளமையாக பராமரித்து கொள்ள மிகவும் உதவியாக உள்ளது. அதாவது 3 டீஸ்பூன் வெந்தயத்தை தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு ஊற வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு பசை போல் அரைத்து உங்களின் முகத்தில் தடவி அது நன்கு உலர்ந்த பிறகு உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
கற்றாழை:
கற்றாழையும் நமது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து நமது சருமத்தை என்றும் இளமையாக பராமரித்து கொள்ள மிகவும் உதவியாக உள்ளது. அதாவது ஒரு சிறிய துண்டு கற்றாழையை எடுத்து அதில் உள்ள சதைப்பகுதியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லினை சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறு அல்லது பால் அல்லது ரோஸ் வாட்டர் ஆகிவற்றை சேர்த்து நன்கு அரைத்து உங்களின் முகத்தில் தடவி அது நன்கு உலர்ந்த பிறகு உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |