How to Remove Dark Circles at Home in Tamil
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அழகினை பராமரித்து கொள்வதில் கவனமாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக தங்களது முகத்தின் அழகினை பராமரிப்பதில் அனைவருமே மிக மிக கவனமாக இருப்பார்கள். ஏனென்றால் நமது அழகினை மற்றவர்களுக்கு முதலில் கட்டுவது நமது முகம் தான். அதனால் அதனின் அழகினை பராமரிப்பது என்பது மிக மிக முக்கியம். அதாவது நமது முகத்தில் ஏதாவது ஒரு சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் நமது மனம் மிக மிக வருத்தப்படும். அதிலும் நமது மனதில் நினைப்பதை நாம் பேசுவதற்கு முன்னால் மற்றவர்களுக்கு கட்டுவது நமது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்கள் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் இருந்த இடமே தெரியாமல் போக உதவும் ஒரு எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Karuvalayam Remove Tips in Tamil:
இயற்கையான முறையில் உங்களின் கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை இருந்த இடமே தெரியாமல் போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- உருளைகிழங்கு – 1
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- காபி தூள் – 1 டீஸ்பூன்
- எலுமிச்சை பழச்சாறு– 1 டீஸ்பூன்
ஒரே வாரத்தில் கொட்டிய இடத்தில் எல்லாம் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
உருளைக்கிழங்கினை எடுத்து கொள்ளவும்:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 உருளைக்கிழங்கினை எடுத்து அதனின் தோலினை நீக்கிவிட்டுசிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி கொள்ளுங்கள்.
மஞ்சள் தூளினை கலந்து கொள்ளவும்:
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் மஞ்சள் தூளினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
புடவைக்கு ஏற்ற சிறந்த ஹேர் ஸ்டைல் இதுதான்
காபி தூளினை சேர்த்து கொள்ளவும்:
பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் காபி தூளினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை பழச்சாற்றினை கலக்கவும்:
இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றினை சேர்த்து நன்கு கலந்து உங்கள் கண்களை சுற்றி நன்கு தடவி கொள்ளுங்கள்.
பிறகு இதனை 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து நன்கு குளிர்ச்சியான தண்ணீரை பயன்படுத்தி கழுவி கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் அனைத்தும் இருந்த இடமே தெரியாமல் மறைந்து போவதை நீங்களே காணலாம்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கி முகம் நிலவுபோல் ஜொலிக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
இதை மட்டும் செய்திர்கள் என்றால் நீங்களே ஆச்சிரியபடுகிற அளவுக்கு முகம் பளபளப்பாக மாறும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |