7 நாட்களில் உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்க பால் மட்டும் போதும்..!

How to Remove Dark Circles at Home Naturally Tamil

இன்றைய சூழலில் அனைவருமே கண்களை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. அதற்கான நேரமும் நமக்கு இல்லை. அதனால் நமது கண்களுக்கு பல வகையான பாதிப்பு ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் பல வகையான பாதிப்புகளில் ஒன்று தான் கண்களை சுற்றி கருவளையங்கள். இன்றைய சூழலில் அனைவருக்குமே இந்த கருவளையம் பிரச்சனை உள்ளது. அதனால் அதனை போக்குவதற்காக நீங்களும் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்பீர்கள். ஆனால் அவையாவும் உங்களுக்கு ஏற்ற நல்ல பலனை அளித்ததா..? என்றால் நம்மில் பலரின் இல்லை என்றே இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்கள் கருவளையங்களை போக்கி கொள்ள உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Remove Dark Circles Under Eyes Permanently in Tamil:

How to Remove Dark Circles Under Eyes Permanently in Tamil

இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்கள் கருவளையங்களை போக்கி கொள்ள உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம். அதற்கு முன்னர் இந்த குறிப்பிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

  1. பால் – 1 டீஸ்பூன் 
  2. தேன் – 1 டீஸ்பூன் 
  3. மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் 
  4. காபித்தூள் – 1 டீஸ்பூன் 

கண்களை சுற்றியுள்ள கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் பால் மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

மஞ்சள் தூளை சேர்த்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க தேனை இப்படி பயன்படுத்துங்க போதும்

காபித்தூளை கலந்து கொள்ளவும்:

இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் காபித்தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் கண்களை சுற்றியுள்ள கருவளையங்களில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

பிறகு நன்கு குளிர்ந்த நீரால் உங்களின் கண்களை கழுவி கொள்ளுங்கள். இதனை தினமும் இரு முறை என ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறைய ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

வேகமாக இளநரையை போக்கி முதுமையிலும் நரை முடி வரமால் இருக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்துங்க போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்