நீங்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு முக கருமை நீங்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

Advertisement

How To Remove Tan in Tamil

என்ன நண்பர்களே வெயில் வெளுத்து வாங்குகிறதா..? வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது அல்லவா..! அதுபோல இந்த வெயில் நேரத்தில் தான் பல நோய்கள் நம்மை நெருங்கும். இதை நினைத்து நம்மில் பலரும் வெயிலில் செல்லவே பயம் கொள்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு இந்த வெயில் காலத்தில் இருக்கும் முதல் கவலை முகம் கருத்து போய்விடுமோ என்பது தான். அதற்காக நாம் அனைவருமே கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட கிரீம் வகைகளை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் நமக்கு எந்த பயனும் இல்லை. மேலும் நமக்கு இது பல பாதிப்புகளை தான் தருகிறது. அதனால் இன்று வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முக கருமையை போக்க டிப்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How To Remove Tan From Face Immediately in Tamil: 

 how to remove tan from face immediately

  1. காபி தூள் – 1 ஸ்பூன்
  2. சர்க்கரை – 1 ஸ்பூன்
  3. காய்ச்சாத பால் – தேவையான அளவு
  4. அரிசி மாவு – 1 ஸ்பூன்

இன்று நாம் முக கருமைக்கு எடுத்து கொள்ளும் பொருட்கள் அனைத்தும் இயற்கையான பொருட்கள் என்பதால், இது சருமத்திற்கு எந்த ஒரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.

உங்க முடியின் வளர்ச்சி உங்களையே வியக்க வைக்கும்.. அதுக்கு இந்த பொருள் மட்டும் போதும்

இந்த பொருட்களில் இருக்கும் பண்புகள் முக கருமையை நீக்கி முகத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இவை முகத்தில் இருக்கும் கரும்புள்ளி, தழும்புகள், கருந்திட்டுகள் போன்றவற்றை நீக்க உதவுகிறது. அதனால் எந்த தயக்கமும் இன்றி இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்: 

 how to remove tan from face immediately

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு காபி தூள், 1 ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை, அரிசிமாவு 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும். பின் இறுதியாக அதில் தேவையான அளவு காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா.. கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக

அவ்வளவு தான். மேலும் இந்த பொருட்கள் அனைத்தையும் உங்களுக்கு தேவையான அளவு கூட எடுத்து கொள்ளலாம்.

அப்ளை செய்யும் முறை:

இந்த பேஸ் பேக்கை உங்கள் முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த பேக்கை உங்கள் முகத்தில் குறைந்தது 30 நிமிடம் அப்படியே வைத்திருந்து பின் கழுவி கொள்ள வேண்டும். இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி முகம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

செம்பருத்தி பூ மட்டும் போதும்.. 3 நாட்களில் முடி 3 மடங்கு அதிகமாக வளரும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement