நரை முடி கருப்பாக வேண்டுமா..? அப்போ தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவுங்க போதும்..!

Advertisement

How to Turn Grey Hair to Black Hair Naturally in Tamil

நாம் அனைவருக்குமே நம்மை மற்றவர்களிடம் அழகாக காட்டிக்கொள்வது என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே உள்ள ஒரு மிக பெரிய பிரச்சனை என்றால் அது நரைமுடி தான். பெரியவர்களுக்கு இது வயது முதிவின் காரணமாக ஏற்படுகிறது. ஆனால் சிறிய குழந்தை முதல் டீனேஜில் உள்ளவர்களுக்கு கூட இந்த நரைமுடி ஏற்படுவதற்கான காரணங்கள் சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கைமுறை ஆகியவற்றால் தான் நரைமுடி ஏற்படுகிறது. அதனால் அதனை போக்க நாமும் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால் அவையாவும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின்பு பயனளிக்காமல் போய்விடும். எனவே தான் இன்று நரைமுடிகளை நிரந்தரமாக போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்கள் தலையில் உள்ள நரைமுடிகளை போக்கி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Permanent Solution for Grey Hair Naturally in Tamil:

Permanent Solution for Grey Hair Naturally in Tamil

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் அது நரைமுடி தான். அதனால் இயற்கையான முறையில் நரைமுடிகளை நிரந்தரமாக போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

குறிப்பிற்கு தேவைப்படும் பொருட்கள்:

  1. தேங்காய் எண்ணெய் – 500 மி.லி
  2. கருவேப்பில்லை – 1 கைப்பிடி அளவு 
  3. அரிசி – 2 டேபிள் ஸ்பூன் 
  4. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் 
  5. கருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் 
  6. ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் 

முகத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்திருக்க இந்த இரண்டு பொருட்களை இப்படி பயன்படுத்துங்க போதும்

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கருவேப்பில்லை, 2 டேபிள் ஸ்பூன் அரிசி, 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

கடாயை எடுத்து கொள்ளுங்கள்:

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 500 மி.லி தேங்காய் எண்ணெய்யை ஊற்றி லேசாக சூடுபடுத்தி கொள்ளுங்கள்.

கண்களை சுற்றியுள்ள கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போக காபி தூளை இப்படி பயன்படுத்துங்க போதும்

விழுதினை சேர்க்கவும்:

இப்பொழுது அதில் நாம் அரைத்து வைத்துள்ள பசையினை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

பிறகு அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் வடிக்கட்டி வைத்து கொள்ளுங்கள்.

ஆலிவ் எண்ணெய்யை கலந்து கொள்ளவும்:

அடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து கொள்ளுங்கள். இதனை உங்களின் தலையில் தடவி 10 நிமிடங்களுக்கு நன்கு மசாஜி செய்து கொள்ளுங்கள்.

பிறகு தலைக்கு குளியுங்கள். இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்தால் உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும்.

ஒரே வாரத்தில் கொட்டிய இடத்தில் எல்லாம் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement