1 கப் பாசிப்பயறு போதும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் இருந்தயிடம் தெரியாமல் மறைந்துவிடும்..!

Advertisement

KarumPulli Maraiya Tips in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் காரணமாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி பருக்கள் வருவது சகஜமான ஒரு விஷயமாகிவிட்டது. அப்படி வரும் பருக்கள் நீங்கினாலும் அவைகளால் ஏற்படும் கரும்புள்ளிகள் உங்களின் முகத்தின் பொலிவை குறைக்கிறது. அப்படி உள்ள கரும்புள்ளிகளை போக்குவதற்காக நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால் அவையாவும் நாம் நினைத்த அளவிற்கு நல்ல பலனை அளித்திருக்காது.

அப்படி  உங்களின் முகத்தில் நீண்ட நாட்களாக உள்ள கரும்புள்ளிகளை கூட எளிதில் போக்குவதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கரும்புள்ளிகள் விரைவில் மறைய:

கரும்புள்ளிகள் நீங்க

பொதுவாக நமது முகத்தில் ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் நமது மனம் மிக மிக கஷ்ட்டப்படும். ஆனால் இன்றைய சூழலில் நமது முகத்தில் பலவகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அப்படி ஏற்படும் பல பிரச்சனைகளில் ஒன்றான கரும்புள்ளியை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு காணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  1. கசகசா – 2 டேபிள் ஸ்பூன்
  2. துளசி – 10 இலைகள்
  3. பாசிப்பயறு – 4 டேபிள் ஸ்பூன்
  4. தக்காளி – 1
  5. ஆவாரம்பூ பொடி – 2 டேபிள் ஸ்பூன்
  6. ரோஸ் வாட்டர் – 2 டேபிள் ஸ்பூன்

1 கைப்பிடி அளவு வெங்காய தோல் மட்டும் போதும் நரைமுடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்

செய்முறை:

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கசகசா, 10 இலைகள் துளசி, 4 டேபிள் ஸ்பூன் பாசிப்பயறு மற்றும் 1 தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள். பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் ஆவாரம்பூ பொடி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

இதனை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது முகத்தை ரோஸ் வாட்டரை பயன்படுத்தி லேசாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். பின்னர் நாம் தயாரித்து வைத்துள்ள பேக்கை தடவி நன்கு மசாஜ் செய்து 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து நன்கு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

பனிக்காலத்தில் கூட உங்களின் முகம் பளபளப்பாக மாற இதை ட்ரை பண்ணுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement