முடி வேகமாக வளர
பொதுவாக ஆசை என்பது சாதாரணமாக அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று. அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு சராசரியான நபருக்கும் எண்ணற்ற ஆசைகள் இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் சிலருக்கு முடியை வேகமாக வளர வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் எப்படியாவது முடியினை வேகமாக வளர வைக்க வேண்டும் என்று கடையில் விற்கும் தேங்காய் எண்ணெய், ஹேர் பேக் என பலவற்றை பயன்படுத்துவார்கள். அதனால் இன்று 15 நாட்களில் 3 அடி வரை முடியினை எவ்வாறு நீளமாக வளர வைப்பது என்பது பற்றிய ஒரு அழகு குறிப்பு பற்றிய தகவலை பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கறிவேப்பிலை முடிக்கு:
கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் யாவும் உடலுக்கு மட்டும் இல்லாமல் தலையில் முடி உதிர்வை அதிகரிக்க செய்யவும் மற்றும் முடி கருப்பாக மாறவும் உதவுகிறது.
ஆகையால் கருவேப்பிலையுடன் சில பொருட்களை சேர்த்து எப்படி ஹேர் பேக் தயார் செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- தேங்காய் பால்- 1/2 கப்
- வெந்தயம்- 150 கிராம்
- பாசிப்பயிறு- 250 கிராம்
- கறிவேப்பிலை- 2 கைப்பிடி அளவு
முதலில் எண்ணெய் தயாரிப்பதற்கு இந்த பொருட்கள் அனைத்தினையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
முகத்தில் உள்ள கரும்புள்ளியை இப்படி கூட குணப்படுத்த முடியுமா
கறிவேப்பிலை ஹேர் பேக்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கைப்பிடி அளவு கறிவேப்பிலையை சேர்த்து எண்ணெய் எதுவும் விடாமல் நன்றாக வறுத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் மற்றொரு பாத்திரத்தில் எடுத்துவைத்துள்ள வெந்தயம் மற்றும் பாசிபயிரினை நன்றாக பொன் நிறமாக வரும் வரை வறுத்து ஆற வைத்து கொள்ளுங்கள்.
பின்பு வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறிய பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் எதுவும் விடாமல் நன்றாக பவுடர் போல அரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்துள்ள பவுடரை சலித்து ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து விடுங்கள்.
ஒரு பவுலில் உங்களுடைய முடிக்கு ஏற்ற அளவு தயார் செய்து வைத்துள்ள பவுடரை சேர்த்து அதனுடன் 1/2 கப் தேங்காய் பாலினையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
ஒரு வேளை உங்களுக்கு தலையில் அதிகமான பொடுகு இருந்தால் தேங்காய் பாலிற்கு பதிலாக தயிர், அதனுடன் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
எப்படி பயன்படுத்துவது:
முதலில் முடியில் தேங்காய் எண்ணெய் தடவி விட்டு அதன் பின்பு பவுலில் கலந்து வைத்துள்ள ஹேர் பேக்கை 10 நிமிடம் தலையில் வைத்து வழக்கம் போல தலை குளித்து விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் செய்தால் வாரம் 1 முறை செய்தால் போதும் முடி கருப்பாகவும் நீளமாக வளரும்.
உங்களின் முகம் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு அழகாக இளமையா இருக்கனுமா
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |