தலையில் பேன் ஒழிப்பது எப்படி.?
தலை முடியை என்ன தான் அழகாக பராமரித்தாலும் ஈறும், பேணும் வந்து விடுகிறது. ஈர் இருந்தாலே எந்த விதமான ஹேர் ஸ்டைலும் பின்ன முடியாது. அப்படியே பின்னினாலும் ஈர் மட்டும் தனியாக வந்து தெரியும். இதனை தவிர்ப்பதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு மற்றும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் முடி உதிர்வு பிரச்சனை தான் ஏற்படும். அட்டைகள் இயற்கையான முறையில் பேன் மற்றும் ஈர் பிரச்சனையை சரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தலையில் உள்ள பேன்களை ஒழிக்க:
தலையில் உள்ள பேன்களை அழிப்பதற்கு வேப்பிலை பெரிது உதவியாக இருக்கிறது. வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது. இதில் உள்ள மகத்துவங்கள் தெரியாமலேயே பல பேர் பயன்படுத்துவது இல்லை. இதனை பயன்படுத்தி தலையில் உள்ள பேனை ஒழிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- வேப்பிலை- ஒரு கைப்பிடி
- துளசி- ஒரு கைப்பிடி
- வெங்காயம்- 5
- புளித்த தயிர்- 2
- கற்றாழை ஜெல்- 2 டீஸ்பூன்
பேக் செய்முறை:

மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்டாகரைத்து கொள்ளவும். இதை தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்து கொள்ளவும்.
அப்ளை செய்யும் முறை:
அடுத்து தலை முடியை சிக்கு இல்லாமல் எடுத்து கொள்ளவும். தலையை இரண்டாக வகுந்து செய்து வைத்துள்ள பேஸ்ட்டை தலை முடி முழுவதும் தடவி கொள்ளவும். அதன் பிறகு தலை வாரும் சீப்பை பயன்படுத்தி ஒரு முறை தலையை சீவ வேண்டும். இப்படி சீவுவதால் பேஸ்ட் தலை முடி முழுவதும் பரவி இருக்கும்.
இந்த பேஸ்ட் ஆனது தலையில் 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும். தலை காய்ந்த பிறகு பேன் சீப்பை பயன்படுத்தி தன்மையை சீவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து செய்து வந்தால் தலையில் உள்ள ஈர் மற்றும் பேன் இரண்டும் ஒழிந்து விடும்.
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |














