நீங்களே எதிர்பார்க்காத முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க..

Advertisement

What to Mix With Coconut Oil for Hair Growth

ஆண்களை விட பெண்களுக்கு தான் முடி அதிகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அதுவும் திருமண வயது வரும் போது தான் அதை பற்றி கவலைப்படுகின்றனர். ஆண்கள் திருமண வயது வரும் போது தான் தலை முடி கொட்டுகிறதே என்று கவலைப்படுவார்கள். சில நபர்கள் அதை அலட்சியம் செய்வதால் தலை முடி உதிர்ந்து சொட்டை விழுக ஆரம்பித்து விடும். தலை முடி உதிர்வை சரி செய்வதற்காக கடையில் விற்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் முடி உதிர்தல் அதிகமாகும். அதனால் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி தலை முடி வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும். அதனால் இந்த பதிவில் தேங்காய் எண்ணெயுடன் என்ன பொருட்களை கலந்து தேய்த்தால் தலை முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl

முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெயுடன் என்ன பொருட்களை கலந்து தேய்க்க வேண்டும்:

தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை:

தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை

கருவேப்பிலையை உள்ள பீட்டா கரோட்டீன் தலை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இதில் ஆக்சிஜினேற்றிகள், ஊட்டச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளது.

ஒரு கைப்பிடி கருவேப்பிலையை எடுத்து வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளவும். பிறகு 100 மில்லி லிட்டர் எண்ணெயில் காய வைத்த கருவேப்பிலையை சேர்த்து கொதிக்க விடவும். கருவேப்பிலை எண்ணெயில் கலந்து நிறம் மாறும் வரை கொதிக்க விடவும். இந்த எண்ணெயானது ஆறியதும் தலை முடி முழுவதும் தடவி மசாஜ் செய்யவும். பிறகு தலைக்கு எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை தேய்த்து தலை தேய்த்து குளிக்க வேண்டும். இதனை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து செய்து வந்தால் தலை முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

கன்னம் கொழுகொழுன்னு இருக்கிறதுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா.?

தேங்காய் எண்ணெய் மற்றும் கலோஞ்சி விதைகள்:

தேங்காய் எண்ணெய் மற்றும் கலோஞ்சி விதைகள்

கலோஞ்சி விதையில் வைட்டமின் பி, ஏ, சி போன்றவை நிறைந்துள்ளது. மேலும் மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு பொட்டாசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது.

ஒரு தேக்கரண்டி கலோஞ்சி விதைகளை அரைத்து கொள்ளவும். இதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். இந்த எண்ணெயை பயன்படுத்துவதற்கு முன்பு எண்ணெயை சிறிதளவு சூடு செய்து பிறகு தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு தலைக்கு எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை தேய்த்து தலை தேய்த்து குளிக்க வேண்டும். இது போல் வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து செய்து வந்தால் தலை முடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement