100 நாள் வேலை திட்டம்
கிராம புறங்களில் மத்திய அரசு அறிவித்த 100 நாள் வேலை திட்டமானது பெரும்பாலும் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் இத்தகைய வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் செல்கிறார்கள். நிறைய நபர்கள் நான் அரசு வேலை செய்கிறேன் என்று பெருமையாக கூறும் பட்சத்தில் இந்த 100 நாள் வேலை திட்டம் என்பதமும் ஒரு அரசு வேலை தான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த வேலைக்கான நேரம் என்பது குறைவு தான் ஆனால் சம்பளம் என்பது கொஞ்சம் அதிகமாக தான் வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தில் தமிழக அரசானது மக்களுக்கு நற்செய்தி கூறும் வகையில் ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது. ஆகையால் அது என்ன அறிவிப்பு என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
100 நாள் வேலை திட்டம் புகார் எண்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை தான் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வேலையானது கிராம புறங்களில் பெரும்பாலும் நடந்துகொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள குளத்தினை தூர் வாருதல், பள்ளியினை சுற்றியுள்ள காடுகளை சீரமைக்குதல் மற்றும் கால்வாய்களை பராமரித்தல் போன்ற வேலைகள் ஆனது 100 நாள் வேலை திட்டம் மூலம் பயனாளர்களுக்கு ஒரு அட்டை கொடுத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் வேலையில் சில மோசடிகள் நடப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இத்தகைய மோசடி குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ள காரணத்தினால் தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பினை அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்👇👇
வருகிறது ரேஷன் கடைகளில் மாற்றம்.. மக்களுக்கு தான் அடிக்கிறது லக்..
அதாவது ஒரு சில மக்கள் 100 நாள் வேலைக்கு வராமலே வந்ததாக கூறி அட்டையில் குறிக்கப்பட்டு அதற்கான சம்பளத்தை பெற்றுக்கொள்வதாக புகார் எழுந்துள்ளது. இவற்றை தடுக்கும் வகையில் தான் அறிவிப்பு வந்துள்ளது.
அது என்னவென்றால் மாநில மற்றும் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் அலுவலரை நியமிக்கவும் மற்றும் 18004252152 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் மக்கள் அவர்களுடய குறைகளை கூறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் tnrd.tn.gov.in என்ற இணையத்தளம் வாயிலாக குறைதீர்க்கும் அலுவலர் உடைய முகவரி, வாட்ஸ் அப் எண் போன்றவற்றையினையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பேருந்து பயணம் குறித்து தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு என்னப்பா சொல்றீங்க அப்புடியா
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |