Pan Card Latest News
இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு நபருக்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கிமான ஒன்றாக இருக்கிறது. இத்தகைய ஆதார் அட்டைக்கு அடுத்த நிலையில் முக்கியமான ஒன்றாக இருப்பது என்னவென்றால் அது பான் கார்டு தான். பொதுவாக வங்கி முதல் வேறு எங்கு சென்றாலும் அங்கு முதலில் நம்மிடம் கேட்கும் ஆவணம் என்றால் அது பான் கார்டாக தான் இருக்கிறது. அப்படி இருந்தாலும் கூட இந்த பான் கார்டிலும் சில விதிமுறைகள் மற்றும் செய்தியினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் அது என்னென்ன மாதிரியான செய்திகள் என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாங்க..!
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100 நாள் வேலை திட்டத்தில் சில அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு..!
பான் கார்டு பற்றிய செய்தி:
இன்றைய காலத்தை பொறுத்தவரை ஒவ்வொரு நபருக்கும் அவர் அவருடைய பெயரில் தனியாக வங்கி கணக்கு இருக்கிறது. அப்படி நீங்கள் வங்கி கணக்கு வைத்து இருப்பது எவ்வளவு முக்கியானதோ அந்த அளவிற்கு பான் கார்டும் முக்கியமான தனி நபர் அட்டை ஆகும்.
நீங்கள் பான் கார்டு வைத்து இருப்பது எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவிற்கு சில விதிமுறைகளும் இருக்கிறது.
No- 1
- வருமானம் வரி சட்டம் 139A-ன் கீழ் ஒரு நபர் ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
No- 2
- நீங்கள் முதலில் ஒரு பான் கார்டு அப்ளை செய்து அது வரவில்லை என்று மீண்டும் ஒரு முறை பான் கார்டு அப்ளை செய்து உங்களுக்கு சில நாட்களுக்கு பிறகு உங்களுடைய முகவரிக்கு 2 பான் கார்டு வந்தால் அதில் ஒன்றை மட்டும் வைத்து கொண்டு மற்றொன்றை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
No- 3
- உங்களுடைய பான் கார்டில் ஏதாவது பிழை இருந்தால் அதனை Online அல்லது அஞ்சல் மூலம் சரிசெய்ய வேண்டுமே தவிர வேறு ஒரு பான் கார்டு புதிதாக விண்ணப்பிக்க கூடாது என்பது தமிழக அரசின் மூன்றாவது விதி ஆகும்.
No- 4
- அதேபோல திருமணம் ஆன பிறகு சிலர் பான் கார்டில் இருக்கும் முகவரியினை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக புதிதாக பான் கார்டு விண்ணப்பிப்பதும் ஒரு நபர் இரண்டு பான் வைத்து இருப்பதின் அடிப்படையில் அடங்கும்.
- நீங்கள் முகவரியினை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வருமான வரித்துறை கூறுகிறது.
No- 5
- அதேபோல ஒரு நபர் அவருடைய தனி நபர் அடையாளமான பான் கார்டை தொலைத்தாலும் மற்றும் பொய்யான பான் கார்டை யார் தயார் செய்து கொடுத்தாலும் குற்றம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலே சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளை யார் மீறினாலும் வருமானம் வரி சட்டம் 227 B-யின் கீழ் 10,000 ரூபாய் வரை அபராதம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏனென்றால் ஒருவருடைய நிதி பொறுப்பையும் மற்றும் பண வர்த்தனையையும் வருமான வரித்துறை பான் கார்டை வைத்து தான் கண்காணிக்கிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 நீங்கள் கனரா வங்கி வாடிக்கையாளரா..! அப்படினா நீங்கள் உடனே படித்து தெரிந்துகொள்ளுங்கள்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |