RBI Latest Announcement
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 1935 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் நடுவண் வங்கியாக விளங்குகிறது. பிறகு, 1949 ஆன் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது. RBI தொடர்ந்து அதன் கீழ் இயங்கிவரும் வங்கிகளுக்கு பல அறிவிப்புகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் இப்போது RBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பை பற்றித்தான் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே, இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது. எனவே RBI-யின் முக்கிய அறிவிப்பு என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
RBI Latest News in Tamil:

இந்திய ரிசர்வ் வங்கி, டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளை வழங்குவதற்கான அறிவிக்கை ஒன்றை புதன் கிழமை அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தங்களின் விருப்பத்திற்கு அல்லது வர்த்தக தொடர்பிற்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளை வழங்குவதற்கு பதிலாக, வாடிக்கையளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, கிரெடிட் கார்ட, டெபிட் கார்ட் அல்லது ப்ரீபெய்ட் கார்ட் வழங்கும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த புதிய விதிகள் அக்டோபர் 01 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் பற்றி ரிசர்வ் வங்கி கவர்னர் சொன்னது என்ன..?
இந்திய வாடிக்கையாளர்களுக்கு தற்போது 5 கிரெடிட் கார்டு நெட்வொர்க் உள்ளது. இதில் விசா, மாஸ்டர் கார்டு, ருபே, அமெரிக்க எக்ஸ்பிரஸ், டைனர்ஸ் கிளப் ஆகியவை அடங்கும். இந்த கார்டு நெட்வொர்க்கில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக வங்கி மற்றும் கார்ட் நெட்வொர்க் மத்தியில் Card Network Portability Option வர உள்ளது என்று தெரிவித்துள்ளது.
சுந்தர் பிச்சையின் புதிய அம்சம்..! யாருக்கெல்லாம் தெரியாதோ தெரிஞ்சுக்கோங்கப்பா..!
| மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |














