சைலண்டாக வந்த ஹாமூன் புயல்… வருகின்ற 29-ஆம் தேதி காத்திருக்கும் நிகழ்வு..!
மதுரை, திருச்சி, தஞ்சை உட்பட 14 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 29-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது குறித்த செய்தியை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
29-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு…
வடகிழக்கு வங்கக்கடலில் நிலவிய மிக தீவிரமான ஹாமூன், புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை தற்கஸ்ட் டெக்கான் அருகில் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக வடக்கு கேரளா மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிகழ்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வருகின்ற 28-ஆம் தேதி வரை லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வருகின்ற 29-ஆம் தேதி மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆயுவு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்ஸியஸாக இருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |














