Amma Kavithai in Tamil 4 Lines
இவ்வுலகில் அனைவருக்கும் இருக்கும் ஆறுதலான வார்த்தை என்றால் அது அம்மா தான். அம்மா என்ற வார்த்தைக்கு ஈடாக எதுவுமே இருக்க முடியாது. அம்மா என்றாலே ஆனந்தம் தான். நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் உண்மையான அன்பை காணவேண்டும் என்றால், அது தாயின் கண்களில் மட்டுமே காண முடியும். வாழ்க்கையில் எது மாறினாலும், தாயின் அன்பு மட்டும் மாறாத ஒன்றாக இருக்கிறது. அம்மாவின் அன்பு தூய்மையானது. தாயின் அன்பிற்கு நிகரான உண்மையான பாசம் இந்த உலகில் வேற எதுவும் இல்லை. இப்படி அம்மாவை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். ஆகவே நம் பதிவின் வாயிலாக 4 வரிகளில் இருக்கும் அம்மா பற்றிய கவிதையை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
அம்மா கவிதை 4 வரிகளில்:
முதலில் நான் பேசி பழகியதும்
உன் பெயர் தான்…!
முதலில் நான் எழுதி பழகியதும்
உன் பெயர் தான் அம்மா..!

அம்மா கவிதை:
வார்த்தைகளே இல்லாத வடிவம்..!
அளவுகோளே இல்லாத அன்பு..!
சுயநலமே இல்லாத இதயம்..!
அவள் தான் அம்மா..!

amma kavithai in tamil 2026:
மூன்றெழுத்து கவிதை
சொல்லச் சொன்னால்
முதலில் சொல்வேன்
அம்மா என்று..!

amma kavithai tamil:
ஆயிரம் அர்த்தங்களை
உள்ளடக்கியது தான்..!
அம்மா என்னும்
உன்னத வார்த்தை..!

amma kavithai in tamil:
அம்மாவின் கைக்குள்
இருந்த வரை,
இவ்வுலகம்
அழகாக தான் இருந்தது..!

| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |














