குழந்தை பற்றிய கவிதை | Kulanthai Kavithai in Tamil
வெளியில் இருந்து எத்தனை கோபத்துடன் வந்தாலும் மழலையின் ஒரு சிரிப்பு போதும் அத்தனை கவலைகளையும் மறக்க. பெரியவர்களாக வளந்தவுடன் அனைவருக்கும் ஆசை திரும்ப எப்போது கிடைக்கும் அந்த கள்ளம் கபடம் இல்லா சிரிப்பு என்று. குழந்தையின் ஒவ்வொரு சிரிப்பிலும், அழுகையிலும் ஒரு அழகு இருக்க தான் செய்கிறது. எவ்வளவு தவறு செய்தாலும் குழந்தையை யாருக்கும் திட்ட பிடிக்காது கொஞ்சத்தான் பிடிக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளை கொஞ்சுவதற்காக இந்த பதிவில் குழந்தைகள் பற்றிய கவிதைகளை பார்க்கலாம் வாங்க.
குழந்தை கவிதை வரிகள்:
அம்மா அழகென்றால் நீ அம்மா என்றழைப்பதில் அழகும் அழகு பெறுகின்றது தமிழும் அழகு பெறுகின்றது
Baby Quotes in Tamil:
மொழிகள் எல்லாம் தவம் கிடக்கிறது நீ வாய் திறந்து பேச!!
குழந்தை கவிதை – Baby Quotes in Tamil:
அதிகாலை பூக்களையும் மிஞ்சிவிடுகின்றது இன்பக் குழந்தைகளின் இனிய புன்னகை
குழந்தை பற்றிய கவிதை – Kulanthai Kavithai in Tamil:
கடவுள்! தன்னையே ஒரு நகலெடுத்து மண்ணில் தவழவிட்டான்… கள்ளமில்லாத இந்த மழலையின் வடிவில்…!
குழந்தை கவிதை | Baby Quotes in Tamil:
அழுகை கூட அழகான கவிதை ஆனது பிறந்த குழந்தை அழுதபோது..!
குடும்பம் பற்றிய கவிதை |
அம்மா கவிதைகள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |