மனித நேயம் கவிதை | Manithaneyam Kavithai in Tamil
இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே தனியாக வாழ முடியாது. ஏனென்றால் ஒருவரைக்கொருவர் உதவி செய்து மனித நேயத்துடன் இருந்தால் மட்டும் தான் இந்த உலகத்தில் வாழ முடியும். மனிதன் என்பவன் இயற்கையின் படைப்பாக இருக்கிறது. மனிதநேயம் என்றாலே மக்கள் மனதில் முதலில் நினைவுக்கு வருவது அன்னை தெரசா, ஹெலன் கெல்லர், நெல்சன் மண்டேலா போன்ற பெண்மணிகள் தான். ஏன் இவர்களை மட்டும் கூறவேண்டுமென்றால் அவர்களுடைய வாழ்க்கை முழுவதையும் உலகத்திற்காக அர்பணித்தவர்கள்.
அந்த அளவிற்கு நம்மால் போகமுடியவில்லை என்றாலும் நமக்கு எதிரே நடக்கும் நிகழ்வுகளில் உதவி தேவைப்படுவோருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வந்தாலே அதுவே ஒரு மனித நேயம் தான். அதனால் இந்த பதிவில் மனித நேயத்தை பற்றி கவிதை வரிகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
மனிதநேயம் வரிகள்:
உடல் என்பதில் வேற்றுமை இருப்பினும்;
உயிர் என்பதால் ஒற்றுமை கொண்டு;
துயரம் கண்டதும் கண்ணீர் விடுத்து;
இஷ்டப்பட்டு இனிதே உதவுவார்….
இயலாமை என்னும் துன்பத்தில் சிக்கி;
இன்னுயிர் துறக்கும் நிலையில் நின்றோரை,
தன்னுயிர் கொண்டு தடையை உடைத்து;
தன்னால் இயன்ற உதவிகள் புரிவார்….
இதயம் என்பதை சதையாய் நினைப்பவர்;
வாழத் தெரிந்தும் வாழ்வை துறந்தவர்….
அன்பு என்பதை நிஜமென உணர்ந்தவர்;
உடன்சேர்ந்து வாழும் வித்தை அறிந்தவர்….
நாணயம் என்பதை உனதென கொண்டால்,
வாழ்க்கை என்பது “வரமாகும்”
மனிதநேயம் கொண்டவர் வாழ்க்கை என்பது,
ஒவ்வொரு நாளும் “சுகமாகும்”.
மனித நேயம் கவிதை வரிகள்:
கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்கா விட்டால்
கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை
பாசிட்டிவ் பற்றி சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்
Manithaneyam Kavithai in Tamil:
அடுத்தவர்களின் வலிகளை
உணர்வுகளால் உணரத்தொடங்கும் போது தான்
மனிதநேயம் பிறக்கிறது
Manithaneyam Kavithaigal in Tamil:
மனிதநேயம் என்ற தண்ணீர் உன்னிடம் இருந்தால்
தாவரம் என்கிற மக்களுக்கு அதைக்கொடுத்து
மலர் தரும் வாசனை என்கிற
பாசமான மக்களை பெற்று கொள்ளுங்கள்
Manithaneyam Tamil Kavithaigal:
மனிதநேயம் ஒவ்வொருவர் வாழ்விலும் பிறக்கட்டும்
மற்றவரை ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் வளரட்டும்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |