வாழ்க்கை தத்துவம் கவிதைகள் | Life Advice Quotes
வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம் பதிவில் வாழ்க்கை தத்துவ கவிதைகளை பற்றி பார்க்கப்போகிறோம். நம் வாழ்வில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை சமாளித்து வாழவேண்டும். இன்று இருக்கும் நிலை நாளை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அதனால் எதை பற்றியும் கவலை படக்கூடாது. இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி, சகிப்புத்தன்மை இருந்தால் வாழ்க்கை அழகாய் இருக்கும்.
வாழ்க்கை தத்துவம்:
வானைப் போன்ற பெரிய
இன்பங்கள் தேவையில்லை..!
விண்மீன் போன்ற
குட்டி குட்டி இன்பங்கள்
போதும் வாழ்க்கையை
அழகாய் வாழ..!
மனதில் உறுதி வேண்டும் கவிதை |
வாழ்க்கை தத்துவ கவிதைகள்:
யாரிடமிருந்தும்
எதையும்
எதிர்பார்க்காதே..!
அது உன்னுடைய
மகிழ்ச்சியை
அழித்துவிடும்..!
வாழ்க்கை தத்துவ கவிதை வரிகள்:
காலம்..!
ஒவ்வொரு
துன்பத்திற்குப்
பின்பும் ஏதோ
ஒரு மகிழ்ச்சியினை
ஒளித்து
வைத்திருக்கும்..!
நட்பு பிரிவு கவிதை வரிகள் |
வாழ்க்கை கவிதை வரிகள்:
வாழ்க்கை
வாழ்வதற்கே தவிர.,
கிடைக்காததை
நினைத்து
வருந்துவதற்கு அல்ல..!
வாழ்க்கை தத்துவம் கவிதைகள்:
விடியும் வரை
தெரிவதில்லை கண்டது
கனவு என்று..!
வாழ்க்கையும்
அப்படி தான்..!
முடியும் வரை
தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..!
நட்பு கவிதை வரிகள் |
வாழ்க்கை தத்துவங்கள்:
தன்னந்தனியாக
உயர பறக்கும்
பறவைக்கு இருக்கும்
நம்பிக்கை..!
உன்மீது உனக்கு
இருந்தால் நீயும்
உயரலாம் வாழ்க்கையில்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |