Marriage Quotes in Tamil
நமது வாழ்க்கையின் மிக மிக முக்கியமான தருணங்களில் ஒன்று தான் இந்த திருமணம். நமது வாழ்க்கையை அடுத்த பரிமாணத்திற்கு கொண்டு செல்ல உதவும் ஒரு நிகழ்வு தான் இந்த திருமணம். திருமணம் என்பது இரண்டு இதயங்கள் இணையும் திருவிழா மட்டுமில்லை உறவுகளும்,நட்புகளும் ஒன்று கூடும் சிறப்பான நாள் தான் இந்த திருமணம். இங்கு தான் பல இன்பங்கள் மற்றும் நெகிழ்வான நிகழ்வுகள் நிகழும். அதேபோல் இளம் வட்டங்கள் தங்களது வருங்கால கணவன்கள் அல்லது மனைவிகளை தேடிவரும் இடமும் இந்த திருமணம் தான். இப்படிப்பட்ட பல சிறப்புகளை கொண்டுள்ள திருமணம் பற்றிய சில கவிதைகளை இங்கு பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள கவிதைகளை உங்களது மனம் கவர்ந்த கவிதைகளை உங்களின் உறவு மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.
குழந்தைகள் தின வாழ்த்து கவிதைகள்
Marriage Quotes:
பத்துப் பொருத்தங்களைப் பார்த்து,
ஒன்பது கோள் நிலைகளை அறிந்து,
எட்டுத்திசையிலிருந்தும் உறவை அழைத்து,
ஏழு அடி எடுத்து வைத்து, அறுசுவை உணவு படைத்து,
பஞ்ச பூதங்களும் சாட்சியாக,
நான்கு வேதங்கள் முழங்க,
மூன்று முடிச்சுகளால் இரு மனங்கள் ஒன்று சேரும்,
ஓர் அற்புத பந்தத்தின் உறவே, திருமணம்
Wedding Quotes in Tamil:
இரு உள்ளங்கள் இணையும்
ஆரம்பம் திருமணம் இணைந்த
இரு கரம் அன்பில் எழுத்திய
காவியம் இல்லறம்
வாழ்க்கைக்கான தன்னம்பிக்கை கவிதைகள்
Wedding Quotes:
வாழ்கை பயணத்தின்
இனிய துவக்க விழா
துணையோடு கரமினையும்
வண்ணமிகு திருமண விழா
Tamil Wedding Quotes in Tamil:
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
கட்டப்பட்ட காதல் பலத்தில்
போகும் பயணங்கள் இனித்திடும்
உயிர்களின் இணைவு திருமணம்.
Tamil Wedding Quotes:
கண் மூடி கண்ட கனவெல்லாம்
கண் எதிரே காணும் விழாகோலம்
கனவும் நினைவாக வாழ்க்கையில்
நகரும் அன்பின் தோரணம் திருமணம்
மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |