நிலா பற்றிய கவிதைகள்
நாம் வாழ்ந்து கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் நிலவினை காட்டி தான் பிள்ளைகளுக்கு சோறு ஊற்றுவார்கள். ஆனால் தற்போது நிலவினை காட்டி சோறு ஊட்டிய காலங்கள் மாறி தற்போது நிலவினை பார்த்து கவிதைகள் கூறும் அளவிற்கு வந்து விட்டது. ஆனால் நிலாவை பார்த்து கவிதைகள் கூறுவது என்பது ஒரு அருமையான தருணம்.
ஏனென்றால் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் அமைதியான ஒரு சூழலில் வானத்தில் மேல்நோக்கி இருக்கக்கூடிய அழகான நிலவை பார்த்து கவிதை கூறுவது என்பது மிகவும் அழகாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் நிலவை பற்றிய கவிதை வரிகளை Image உடன் பார்க்க போகிறோம். அதில் உங்களுக்கு ஏதேனும் Image பிடித்து இருந்தால் அதனை நீங்கள் Download செய்து கொள்ளலாம்.
Short Moon Quotes in Tamil:
உன் வெண்முகத்திற்கு ஈடு குடுக்க முடியாமல் வெறிச்சோடியது நிலவின் வெளிச்சம் கூட
Nila Kavithai:
யாருக்கும் எட்டாத உயரத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்து நம் வாழ்க்கையைப் பார்த்து ரசிக்கிறது நிலா!
Nila Kavithai in Tamil:
நீ என் எதிரில் இருந்தால்
உன் இமை இமைக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அழகிய கவிதை தொடுப்பேன்..!
நிலா பற்றிய கவிதைகள்:
பல ஆண்களின்
கனவு தேவதையாகவும்
கவிதை தேவதையாகவும்
என்றும் இருப்பது
நிலா மட்டுமே..!
Moon Kavithai in Tamil:
முழு நிலவாய் இருந்த
உன் மீது யார் கண்பட்டு
தேய்பிறை ஆனாய்
தென்றல் பட்டு மீண்டும் வர
காத்திருப்பேன் உனக்காக..!
நிலா கவிதை வரிகள்:
நள்ளிரவில் தனிமை கூட
ஒரு விதமான இன்மை
சேர்க்கிறது நானும் என்
நிலவே நீயும் பேசாமல்
ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொள்ளும் போது..!
நிலா கவிதைகள் தமிழில்:
பார்த்தவருக்கு நிலவின் அருமை
தெரிந்ததை விட அதை
ரசித்தவருக்கு தான்
நிலவின் அருமை
என்னவென்று..!
நிலா கவிதை 4 வரிகள்:
அன்னை மடியில்
அழுத நிலையில்
கண்கள் கதறி
கன்னங்கள் சிவந்து
உண்ண மறுத்து
உணவை வெறுத்து
நான் செய்த நாடகங்கள்
உன்னைக் காட்டி
எந்தன் பாட்டி
நிலாச்சோறு ஊட்டி
தோள்மீது சாய்த்து
நித்திரையில் ஆழ்த்திய
அவ்வினிய நினைவுகள்
Nila Kavithai in Tamil 2 Lines:
புத்தகம் ஏந்தி
பள்ளி புதுந்து
குறும்புகள் குறைந்து
குணங்கள் மாறி
நட்புகள் தோன்றி
வண்ணங்கள் பூட்டி
வாழ்க்கையின் கோணங்கள் மாறிய நாட்கள்
உன் ஒளியிலே பயின்று
உன்னுறவிலே மகிழ்ந்து
உன் தரிசனம் வேண்டி
காத்திருந்த தருணங்கள்
மங்கையாய் நான் மாறி
என் நளினங்களது கூடி
ஒவ்வோர் திங்களும்
வளர்ந்து, தேய்ந்து
நிலவாய் மெருகேறி
தோழியாய் உனை பாவித்து
உன்னோடு பகிர்ந்த கதைகள்
என் நெஞ்சில் இனிக்குதடி
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |