முயற்சி பற்றிய பொன்மொழிகள் | Muyarchi Quotes in Tamil

Advertisement

 முயற்சி Quotes in Tamil | Muyarchi Thiruvinaiyakkum Quotes in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் முயற்சி பற்றிய பொன்மொழிகளை படித்தறிவோம். நம்மால் இது முடியுமா என்று நினைக்காமல்  முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றியை அடையாளம். முயற்சியை பற்றி வள்ளுவர் அழகாக கூறியுள்ளார். முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். இதற்கென்ன பொருள் தெரியுமா.? முயற்சி செய்யாமல் எதுவும் இல்லை. முயற்சி தான் நாம் செய்கின்ற செயலுக்கு அடித்தளமாக இருக்கும்.

பொதுவாக நாம் ஒரு செயலை தொடங்குவதற்கு நினைப்போம். ஆனால் முயற்சி செய்யாமலே மனதை தளரவிடுவோம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பார்கள். முயற்சியின்றி வாழ்பவன் வெற்றியை அடைய  முடியாது. என்னால் முடியாது என்று சொல்கிறவர்களுக்கு வாழ்க்கை இருட்டாக்காகத்தான் இருக்கும். முயற்சித்தால் வாழ்க்கையின் உயரத்தை அடையலாம். உங்களை முயற்சிக்க வைப்பதற்கு சில வரிகளை பார்ப்போம் வாங்க..!

தன்னம்பிக்கை பொன்மொழிகள்

முயற்சி வெற்றி தரும்:

வெற்றியை விட பெரிய விஷயம்
எத்தனை முறை தோற்றாலும்
மீண்டும் முயற்சி செய்வது..

Muyarchi Thiruvinaiyakkum Quotes in Tamil

முயற்சி வெற்றி தரும்:

முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்தது முடியும் வரை… 

Muyarchi-Thiruvinaiyakkum-Quotes-in-Tamil

Muyarchi Quotes in Tamil:

முடிவின்றி முயற்சித்தால்
உன் வாழ்வில்
நீ தேடிய
வழியை தெரிந்துகொள்ளலாம்..!

Muyarchi Thiruvinaiyakkum Quotes in Tamil

Muyarchi Quotes in Tamil:

நகர்ந்தால் தான் நதி அழகு
வளர்ந்தால் தான் செடி அழகு
முயன்றால் தான் மனிதன் அழகு
மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல
முயற்சி செய்பவனே மனிதன் ..!

Muyarchi Quotes in Tamil

 

Muyarchi Quotes in Tamil:

தொடர்ந்து முயற்சி செய்தால்
தோல்வியும் ஒரு நாள்
தோற்று போகும் 

Muyarchi Quotes in Tamil

முயற்சி பற்றிய சிந்தனைகள்:

விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்

முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!

நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான். என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை! -பெரியார் செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ,அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது -எமர்சன்

எல்லோருமே உலகை மாற்றிவிடத் துடிக்கின்றனர். ஆனால், எவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை! -லியோ டால்ஸ்டாய்

வராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள். – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதல்ல; எடுக்கப்படுவது! – நேதாஜி

உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது! -அம்பேத்கர்

முயற்சி பற்றிய பொன்மொழிகள்:

நடக்கும் என்று
நினைத்துக் கொண்டு
நடக்கும் என்பதில் நம்பிக்கை
வைத்துக் கொண்டு
விடா முயற்சி செய் வெற்றி
நிச்சயம் ஒரு நாள்
உன்னை தேடி வரும்.

தன்னால் முடியாது என்று
நினைப்பவன் வெற்றி பெற
தவறிவிடுகிறான்.. தன்னால்
முடியும் என்று நம்ம்பிக்கை
வைத்து முழு முயற்சியோடு
பாடுபடுபவன் மற்றவர்கள்
விட்ட வெற்றியையும் சேர்த்து
பெற்றுக் கொள்வான்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement