பார்ப்பவன் என்ன நினைப்பான் என்று பயத்துடன் வாழாதீர்கள்.. படைத்தவன் என்ன நினைப்பான் என்று பயந்து வாழுங்கள்
சிவன் கவிதை வரிகள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! மும்மூர்த்திகளில் ஒருவர் தான் சிவபெருமான். இந்து மதங்களில் சிவனை வழிபடுவார்கள். சிவன் அழித்தல் தொழிலுடனும் தொடர்புபடுத்தப்படுகின்றனர். பொதுவாக சிவன் என்ற சொல்லுக்குத் தூய்மையானவன் அல்லது தூய்மைபடுத்துபவன் என்ற வகையில் பொருள் சொல்லப்படுகிறது. சரி இந்த பதிவில் சிவன் பற்றிய பொன்மொழிகளை Images மூலம் பதிவு செய்துள்ளோம் அவகற்றில் தங்களுக்கு ஏதேனும் பிடித்திருந்தால் டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.
சிவன் பொன்மொழிகள்:
பொறுமையாக இரு தாமதங்கள் உன் வாழ்வில் தரமான அற்புதங்களை கொண்டு வரும்!
Sivan Quotes in Tamil
தூக்கி வைப்பதும் அவனே…
உனை தூக்கி சுமப்பதும் அவனே…
நம்பிக்கையுடன் ஓடு நிழலாய் அவன் வருவான்…
உனை காத்திடுவான்.
நெஞ்சில் அவனே…
என்றும் சிவனே!!!
சிவன் கவிதை வரிகள்:
தலைகீழாக நின்றாலும் தலையில்
எழுதியது நடந்தே தீரும்…
Sivan Quotes in Tamil One Line:
எதையெல்லாம் நீ இழந்தாயோ அதைவிட அதிகமாக உன்னை வந்து சேரும்…
Shiva Quotes in Tamil
சிவாயநம எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு
சிவமயம் சிவன் கவிதை வரிகள்:
பிறை சூடிய பித்தனே
அர வணிந்த அத்தனே
கயிலை வாழ் சித்தனே
சுடலை நீறணி சுத்தனே …!!
நெற்றியில் கண் கொண்டோனே
கங்கை சடையில் வைத்தோனே
புலித் தோலை அணிந்தோனே
திரி சூலம் ஏந்தியோனே ….!!
தில்லை வாழ் கூத்தனே
லிங்கத் திரு மேனியனே
சடா முடி தரித்தோனே
தன்னில் சக்தி இணைத்தோனே….!!
தாண்டவ மாடும் சபேசனே
திரிபுர மெரித்த ஈசனே
பண் ணிசைக்க மகிழ்வோனே
பஞ்ச பூதமாய் நிறைந்தோனே ….!!
ஆல கால முண்டோனே
நீல கண்ட நாயகனே
மண் பிட்டுக்கு சுமந்தோனே
நரியைப் பரி ஆக்கியோனே …!!
காமனைக் கண்ணால் எரித்தோனே
காலனைக் காலால் உதைத்தோனே
ஜோதிர் லிங்கமாய் இருப்போனே
ஜோதியாய் காட்சி தந்தோனே …!!
சிவாய நமவெனச் சொன்னால்
அபாய மிலையென வருவாய்
உபாய மிதுவென உணர்த்தி
அபய மளிப்பாய் சிவனே
Annamalaiyar Quotes in Tamil:
இது போன்ற பல தத்துவங்கள் சார்ந்த பதிவுகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> | QUOTES IN TAMIL |