தாய்ப்பால் தினம் கவிதை
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் உணவாக கொடுப்பது தாய்ப்பால் தான். இந்த தாய்ப்பாலில் நமது உடலிற்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் இருக்கிறது. அதனால் இதனை பிறந்த குழந்தைக்கு கொடுப்பது அவசியமானது. சில பேருக்கு கர்ப்ப காலத்தில் சரியான உணவுகளை எடுத்து கொள்ளாமல் தாய்ப்பால் ஆனது சரியாக சுரக்காது. இதனால் குழந்தைக்கு பாட்டில் பால் போட வேண்டிய அவசியம் ஏற்படும். உலக தாய்ப்பால் வாரமாக ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை கொணடாடப்படுகிறது. அதனால் இந்த பதிவில் தாய்ப்பால் தின கவிதையை கொடுத்துள்ளோம்.
Breastfeeding Quotes in Tamil
பாலூட்டுவதில்தான் ஒரு பெண்
தன் தாய்மையை கண்ணெதிரே
கண்டு உணர்கிறாள்; அதில் ஒவ்வொரு
கணமும் மகிழ்ச்சியே.
பாலூட்டுவது பெண்களின்
மார்பழகைக் குறைக்காது; அது
அவர்களை மகிழ்வூட்டி அழகை
கூட்டுகிறது.
தாய்ப்பால் கொடுப்பதில் குழந்தை
பாலை மட்டும் பெறுவதில்லை, நமது ஆற்றலையும் சேர்த்தே பெறுகிறது
உலக தாய்ப்பால் தின கவிதை வரிகள்
பாட்டில்பால் குழந்தையின் வயிற்றை நிரப்பலாம்
ஆனால் தாய்ப்பால் தான் ஆன்மாவை நிரப்புகிறது

உலக தாய்ப்பால் வார கவிதை:
கலப்படம் இல்லாத அன்பும், கலப்படம் இல்லாத உணவு சேர்ந்து கிடைக்கும் இடமென்றால் அவை அன்னையின் தாய்ப்பால் தான்.
தாய்ப்பால் தின கவிதை:
அழுத குழந்தையும் அமைதியாகிவிடும் தாய்ப்பால் அருந்தும் போது குழந்தை மட்டுமில்லை அவளும் தான்.

உலக தாய்ப்பால் தின கவிதை:
இன்பம் துன்பம் எது வந்தாலும் தன அருகில் வைத்து அணைத்து கொள்கிறது தாய்மை
உனக்குள் உறங்கும் பொழுது உன் உதிரத்தை எனக்கு உணவளித்தாய்
உன்னை பிரிந்து வெளியே வந்த போது
உன் உதிரத்தை எனக்கு பாலாக மாற்றி என் பசி அமர்த்தினாய்
Ulaga Thaipal Dhina Kavithai:
இந்த உலகத்தில் கலப்படம் இல்லாத உணவு என்றால்
அவை தாய்ப்பால்
| இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |













