வள்ளலார் பொன்மொழிகள்
Vallalar Quotes: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.பதிவில் வள்ளலார் பொன்மொழிகள் பற்றி பார்க்கலாம். இவரது இயற்பெயர் திருவருட்பிரகாச வள்ளலார், இராமலிங்க அடிகளார் என்ற பெயரும் உண்டு. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடியாவர். ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர். அவர் நமக்கு பல பொன்மொழிகளை தந்துவிட்டு சென்றுள்ளார். வள்ளலாரின் சிறந்த பொன்மொழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
Vallalar Ponmozhigal in Tamil – வள்ளலார் பொன்மொழிகள்:
கடவுளிடம் சரணடைந்தால்
மட்டுமே நம்மிடம் இருக்கும்
பொய் மற்றும் பொறாமை
போன்ற தீய பண்புகள்
நம்மை விட்டு நீங்கும்
Vallalar Quotes in Tamil:
உண்மையை மட்டும்
பேசுங்கள் அது
உங்கள் மேல் உள்ள
மரியாதையை பாதுகாக்கும்.
Vallalar Ponmozhigal in Tamil:
1.முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்.
2.மரணத்திற்கு பிறகு எதையும் கொண்டு செல்ல போவதில்லை. அதனால் தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்காதே.
3. வாழும் வரை ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்.
4. பணத்தை சேமிப்பதற்காக ஆரோக்கியத்தை இழந்து விடாதே.
5. மரணத்திற்கு பிறகு என்ன ஆகும் என சிந்திக்காதே.
6. வாழும் போதே உறவுகள், நண்பர்கள், மனைவி, குழந்தைகள் ஆகியோரை ஆத்மார்த்தமாக நேசி.
Vallalar Ponmoligal:
உண்டியலில் காணிக்கை
செலுத்துவதற்கு பதிலாக
பசியில் இருப்போருக்கு
வயிறார உணவு கொடுங்கள்.
அதுவே கடவுளுக்கு
மகிழ்ச்சி கொடுக்கும்.
அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்..! |
Vallalar Famous Quotes in Tamil – Vallalar Quotes in Tamil
பிறருடைய பசியைப்
போக்குவதோடு மட்டும்
ஒருவனுடைய ஒழுக்கமும்
கடமையும் முடிந்து விடாது.
பிறருக்கு ஏற்படும்
துன்பங்களை களையவும்
ஒவ்வொருவரும்
முன் வர வேண்டும்.
Vallalar Ponmozhigal in Tamil – Vallalar Famous Quotes in Tamil:
மண்ணாசை கொண்டு
மண்ணை ஆண்ட மன்னவர்
எல்லோரும் மடிந்து மண்ணாகி
விடுவதை நீ அறிவாய் இருந்தும்
நீ ஏன் மண்ணாசை கொண்டு
அலைகின்றாய்..?
Vallalar Quotes in Tamil:
உடலை வருத்தி விரதம்
இருப்பதை விட.. யாரையும்
துன்புறுத்தாமல் இருப்பதே
சிறந்தது.
Vallalar Ponmoligal:
Vallalar Quotes in Tamil:
Vallalar Tamil Quotes:
1.பிள்ளைகளிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கவோ, அவர்களை உனது அடிமைகளாக நடத்த வேண்டும் என நினைக்காதே.
2. என்னுடைய மரணத்திற்கு பிறகு என ஒரு போதும் உன் பிள்ளைகளிடம் சொல்லாதே. பிறகு உனது மரணம் எப்போது வரும் என அவர்கள் காத்திருக்க துவங்கி விடுவார்கள்.
3. மற்றவர்களின் வாழ்க்கையை பார்த்து பொறாமை கொள்ளாதே.
4.வாழ்க்கையை அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்.
5. மற்றவர்களின் நல்ல பழக்கங்களை மனம் திறந்து பாராட்டு.
6.வாழ்க்கை வாழ்வதற்கு தான். காலம் ஓடி விடும். ஆர்வத்துடன், வாழ்க்கையை நேசித்து வாழ்.
7. ஆதரவற்றவர்கள், ஏழைகள், வயதானவர்கள், நோயுள்ளவர்களிடம் ஒரு போதும் கடுமையாக நடந்து கொள்ளாதே.
8. உணவு, தூக்கம், ஓய்வு, பேச்சு ஆகியவற்றை குறைத்து, அதிகமாக உழை.
9. நல்ல மனிதர்களுடன் வாழ பழகு. அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடு.
10. தியானம், படிப்பு, உடற்பயிற்சி, மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு அதிக நேரம் செலவிடு.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |