தனிநபர் கடன் பெற்ற என்ன செய்ய வேண்டும்? Aadhar Card Loan Scheme in Tamil
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பான வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது வங்கி வழங்கும் தனிநபர் கடன் பற்றி தான். இந்தியாவில் அத்தியாவசிய அடையாள அட்டையான ஆதார் அட்டையை வைத்து நாம் கடன் பெற முடியும். அனைவருக்குமே ஏதாவது ஒரு விஷயத்திற்க்காக பணம் தேவைப்படும். அந்த பணத்தை நாம் யாரிடமாவது வட்டிக்கு வாங்குவோம், அல்லதும் நம்மிடம் உள்ள நிலம், நகை இதுபோன்றவற்றை அடுக்கு வைப்போம். அவசர பணம் தேவைக்கு ஏராளமான வங்கிகள் 5 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்குகிறது. அந்த கடனை எப்படி பெறலாம். என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும். எப்படி விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்களை இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க.
ஆதார் கார்டு மட்டும் போதும் 5 லட்சம் வரை பணம் கிடைக்கும்..!
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமான ஒன்று. அது வெறும் அட்டை மட்டும் அல்ல. ஆதார் அட்டையை இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு உதவி செய்யும். குறிப்பாக நமது நிதி நெருக்கடியை ஆதார் அட்டையை வைத்து சமாளிக்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 ஆண்டில் 7 லட்சம் வரை லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்..!
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது ஆதார் கார்டு மூலம் வங்கிகளில் கடன் வாங்க முடியும். வாங்கியலில் பெர்சனல் லோன் வாங்குவதற்கு கொலேட்ரல் எதுவும் கேட்கப்படுவதில்லை ஆதார் கார்டு அல்லது பான் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலே போதும். எளிதாக தனிநபர் கடன் பெற முடியும்.
நமது ஆதார் கார்டை வைத்து வங்கிகளில் லட்ச கணக்கில் கடன் வாங்க முடியும். வங்கிகளில் பெர்சனல் லோன் வாங்குவதற்கு உங்களின் KYC எனப்படும் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.
அதில் உங்களது அடையாளச் சான்று, முகவரிச் சான்று போன்று ஆவணங்கள் கேட்கப்படும். இதற்கு உங்களிடம் ஆதார் கார்டு இருந்தாலே போதும். ஆன்லைன் மூலமாகவே நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
எந்த வங்கியில் நீங்கள் கடன் வாங்க விரும்புகிறீர்களோ அந்த வங்கியில் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் App-யில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் SBI வங்கியில் கடன் வாங்க விரும்புகிறீர்கள் என்றால் SBI பேங்கிங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அல்லது SBI மொபைல் App-யில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். பிறகு உங்கள் கடனானது உங்கள் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படும்.
இந்த தனிநபர் கடன் பெறுவதற்க்கான வயது தகுதி எவ்வளவு என்றால் 23 வயது முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
10 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |