சீனியர் சிடிஸின் சேவிங்ஸ் ஸ்செமே | Senior Citizen Savings Scheme Details in Tamil
Advertisement
பணத்தின் தேவை மற்றும் அருமை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். பணத்தை சம்பாதிப்பதற்கு தான் மனிதர்களின் வாழ்க்கை உள்ளது என்றே சொல்லலாம். அப்படி நீங்கள் உழைக்கும் சம்பளத்தை சேமிப்பது முக்கியமல்லவா. அந்த வகையில் இளமை காலத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைப்பதற்கான ஒரு அருமையான திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அது என்ன மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்று தானே யோசிக்கிறீர்கள், வாங்க இந்த தொகுப்பில் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் பற்றிய முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
சீனியர் சிடிஸின் சேவிங்ஸ் ஸ்செமே:
Advertisement
இந்த திட்டம் வயதான காலத்தில் முதியவர்களின் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிப்பதற்கு உதவுகிறது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் அவர்களுக்கு பல விதத்திலும் நன்மை தரக்கூடியதாக இருக்கும்.
NRI மற்றும் HUF வயதானவர்கள் இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க முடியாது. ஓய்வு கால நிதி சேமிப்பதற்கான திட்டமிடுதலை நாம் 30 முதல் 40 வயதிற்குள் தொடங்க வேண்டும், அப்போது தான் ஓய்வு காலத்திற்கு தேவையான நிதி நம்மிடம் சேமிப்பாக இருக்கும்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:
இந்த திட்டத்தில் சேர்வதற்கான வயது தகுதி 60 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
VRS பெறுபவர்கள் 55 வயதிற்கு மேல் சேர்ந்து கொள்ளலாம்.
50 வயதிற்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். NRI மற்றும் HUF இதில் சேர முடியாது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்:
இந்த கணக்கை தொடங்குவதற்கு படிவம் A- வை பூர்த்திச் செய்து மற்றும் கணக்கை துவங்கும் ஒரு விண்ணப்ப படிவம், 60 வயதை அடைந்ததற்கான சான்று விண்ணப்பம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை கொடுக்கும்போது அதனுடன் Rs.1000 அல்லது Rs.2000 பணத்தை வைப்பு நிதியாக செலுத்த வேண்டும்.
இந்த திட்டம் மூலமாக நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கை திறக்க முடியும். இதில் செய்யும் முதலீடு 15 லட்சத்திற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும்.
வட்டி:
இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 7.4% ஆகும்.
இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டிற்கும் அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி என்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகின்றது.
இதில் இருக்கும் முக்கியமான அம்சம் மற்ற வங்கிகளை போல இதில் கூட்டு வட்டி கிடையாது.
முதிர்வு:
இதை நீங்கள் ஐந்து ஆண்டிற்கு பிறகு கணக்குப் புத்தகம், படிவம் ஈ மற்றும் எழுத்து வடிவிலான விண்ணப்பம் போன்றவற்றை சமர்ப்பித்து தொகையை எடுத்து கொள்ளலாம்.
நீங்கள் ஒருவருடம் முடிந்த பின் பணத்தை எடுக்க நினைத்தால் எடுத்து கொள்ளலாம், ஆனால் டெபாசிட் தொகையில் 1.5% கழித்துக்கொள்ளப்படும்.
2 ஆண்டு ஆண்டுகளுக்குப் பின் கணக்கை முடித்துக்கொண்டால் 1% கழித்துக்கொள்ளப்படும்.
Senior Citizen Savings Scheme Sbi in Tamil:
மக்களுக்கு பல்வேறு சேவைகளை எஸ்பிஐ வங்கி வழங்குகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கி வீகேர் திட்டத்தின் மூலம் முதியவர்கள் தங்களின் நிதி செலவுகளை தாங்களே முடிவு செய்ய முடியும்.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள், இதில் நீங்கள் 2 கோடி வரை டெபாசிட் செய்யலாம். இதன் மூலம் உங்களுக்கு 0.30% வரை வட்டி வழங்கப்படும்.
டெபாசிட் செய்யும்பொழுது வாடிக்கையாளர்கள் மாதாந்திர அளவிலா அல்லது காலாண்டு அளவிலா என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Senior Citizen Savings Scheme ICICI in Tamil:
மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி திட்டத்தில் சீனியர் சிட்டிசன் பயனடையும் விதமாக ஐசிஐசியை வங்கி அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த வங்கியில் சீனியர் சிட்டிசன்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதம்
நாட்கள்
வட்டி விகிதம்
7 – 14 நாட்கள்
3%
15 – 29 நாட்கள்
3%
30 – 45 நாட்கள்
3.50%
46 – 60 நாட்கள்
61 – 90 நாட்கள்
121 – 150 நாட்கள்
4%
151 – 184 நாட்கள்
185 – 210 நாட்கள்
4.90%
211 – 270 நாட்கள்
271 – 289 நாட்கள்
290 – 364 நாட்கள்
1 ஆண்டு – 389 நாட்கள்
5.50%
390 நாட்கள் – 15 மாதங்கள்
5.50%
பயன்கள்:
இதை அரசாங்கம் நடத்துவதால் பாதுகாப்பான முதலீட்டு நிறுவனம் ஆகும்.
இதில் கணக்கு தொடங்குவது எளிமை, நீங்கள் இதை தபால் அல்லது அங்கிகரிக்கப்பட்ட வங்கி எதில் வேண்டுமானாலும் தொடங்கி கொள்ளலாம்.
SCSS கணக்கு ஆண்டுக்கு 7.4 சதவீத நல்ல வருவாயை வழங்குகிறது
கணக்கு திறக்கும் நேரத்தில் நியமன வசதி உள்ளது.
நல்ல வரியை வழங்குகிறது, 1.5 லட்சம் ரூபாய் வரை உரிமை கோரலாம் பிரிவு 800C இந்திய வரிச் சட்டம் 1961.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>
ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.