கூடைப்பந்து விளையாட்டு பற்றி யாருக்கும் தெரியாத பல சுவாரசியமான தகவல்கள்..!

Advertisement

Rules of Basketball in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். அதிலும் குறிப்பாக விளையாட்டுகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே நாம் அனைவருக்குமே விளையாட்டு என்றால் மிக மிக பிடிக்கும். ஆனால் ஒரு சிலருக்கு விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கும். அப்படி விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு விளையாட்டு பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அதாவது ஒருவிளையாட்டினை எவ்வாறு விளையாட வேண்டும் அதன் விதிமுறைகள் என்னென்ன போன்றவற்றை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் கூடைப்பந்து விளையாட்டு பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

பேட்மிண்டன் விளையாட்டை பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல்கள்

கூடைப்பந்து விளையாட்டின் வரலாறு:

Basketball rules in tamil

பொதுவாக இந்த கூடைப்பந்து விளையாட்டினை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். நாம் அனைவருமே நமது சிறுவயதில் இந்த விளையாட்டினை ஒரு முறையாவது விளையாடி இருப்போம்.

அப்படி நாம் விளையாடிய விளையாட்டு பற்றிய விவரங்களை இங்கு அறிந்து கொள்வோம் வாங்க..

இந்த கூடைப்பந்து விளையாட்டினை ஆங்கிலத்தில் Basketball என்று அழைப்பார்கள். இது முதன் முதலில் டிசம்பர் 1891 இல் உருவானது. அதாவது இதனை அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்த ஜேம்ஸ் நைஸ்மித் என்பவர் தான் முதன் முதலில் அறிமுகம் செய்தார்.

இவர் இந்த கூடைப்பந்து விளையாட்டினை கண்டுபிடிப்பதற்கான முக்கிய காரணம் குளிர்காலத்தில் மாணவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது தான். கூடைப்பந்து விளையாட்டினை கண்டுபிடிக்கும் வரை குளிர்காலத்தில் மாணவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உள்ளரங்க விளையாட்டு எதுவும் இல்லை.

அதன் பிறகு காலப்போக்கில் இது உலகம் முழுவதும் பரவி தற்போது அனைவராலும் விரும்பி விளையாடப்படுகிறது.

கைப்பந்து விளையாட்டின் விதிமுறைகள் என்னென்ன

கூடைப்பந்து விளையாட்டின் விதிமுறைகள்:

  • கூடைப்பந்து என்பது மொத்தம் பத்து வீரர்களைக் கொண்ட ஒரு விளையாட்டு ஆகும். அதாவது ஒரு அணிக்கு 5 பேர் என இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடும் ஒரு விளையாட்டு ஆகும்.
  • பந்தை ஒரு கையைக் கொண்டோ அல்லது இரண்டு கைகளின் உதவியாலோ எந்த திசையில் வேண்டுமானாலும் வீசலாம்.
  • ஒரு ஆட்டக்காரர் பந்துடன் ஓடக்கூடாது. ஆட்டக்காரர் பந்தினைப் பிடித்தவுடன் அந்த இடத்தில் நின்றவாறே குறிப்பிட்ட இடத்திற்கு அதனை வீசிவிட வேண்டும்.
  • பந்தினை கைகளிலோ அல்லது கைகளுக்கு இடையிலோ மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
  • எதிரணியினரை எந்த வழியிலும் தோளினைத் தள்ளுவதோ, பிடிப்பதோ, அடிப்பதோ, அழுத்துவதோ அல்லது தடுக்கி விடுவதோ கூடாது. ஒரு நபர் முதல் முறை இந்த விதியினை மீறும் போது அது முறைகேடாகக் (foul) கணக்கிடப்படும். ஒரு நபர் இரண்டாவது முறை இந்த விதியினை மீறினால் அடுத்த முறை பந்து கூடைக்குள் விழும் வரை அந்த நபர் இடை நீக்கம் செய்யப்படுவார். மேலும் இவரால் தள்ளப்பட்ட வீரருக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் அந்த ஆட்டம் முழுவதும் அவர் விளையாட அனுமதிக்கப்படமாட்டார். அதேபோல் அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரும் விளையாட அனுமதிக்கப்படமாட்டார்.
  • கை முட்டியைக் கொண்டு பந்தை அடித்தால் அதுவும் முறைகேடாகக் (foul) கணக்கிடப்படும்.
  • எந்த ஒரு அணியினரும் தொடர்ந்து மூன்று முறைகேடுகள் செய்தால் அது எதிரணியினருக்கான ஒரு கோலாகக் கருதப்படும்.
  • பந்து மைதானத்தில் இருந்து கூடைக்குள் வீசப்பட்டு அல்லது அடிக்கப்பட்டு அது சிறிது நேரம் அங்கு நின்றால் (விழாமல்) அது கோல் எனக் கருதப்படும்.

டென்னிஸ் விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியுமா

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports

Advertisement