உங்களுக்கு பூச்சி கடித்திருக்கு என்பதை இதை வைத்து கண்டுபிடித்து விடலாம்..

Advertisement

பூச்சி கடி அறிகுறிகள்

பூச்சிகளில் விஷமுள்ள பூச்சி, விஷமற்ற பூச்சி என இருவகையாக உள்ளது. விஷம் உள்ள பூச்சிகள் நம்மை கடித்து விட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் பெரிய விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இதை தவிர நாம் அன்றாட வாழ்வில் தினமும் கொசுக்கள், எறும்புகள், பல விஷமற்ற பூச்சிகள் என பல பூச்சி இனங்கள் நம்மை கடிப்பதுண்டு. சில நேரங்களில் பூச்சி கடித்திருக்கா என்பதே தெரியாது, ஆனால் நம் உடலில் அலர்ஜி ஏற்பட்டிருக்கும். நமக்கு பூச்சி தான் கடித்திருக்கு என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் பூச்சி கடித்ததற்கான அறிகுறிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

பூச்சி கடித்தற்கான அறிகுறிகள்:

பூச்சி கடி அறிகுறிகள்

பூச்சி கடித்த இடத்தில் வீக்கம் காணப்படும்.

தோல் சிவந்து காணப்படும், அல்லது அரிப்பு ஏற்படும்.

பூச்சி கடித்த இடத்தில் வலி இருக்கும்.

கடித்த இடத்தில் சூடாகவோ அல்லது கூச்சமின்மை உணர்வு காணப்படும்.

பூச்சி கடித்த இடமானது எந்த உணர்வும் இல்லாமல் இருக்கும்.

ஃபைப்ராய்டு கருப்பை கட்டி அறிகுறிகள் என்ன தெரியுமா..?

பூச்சி கடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அறிகுறிகள்:

காய்ச்சல்

குமட்டல்

வாந்தி

மயக்கம்

குழப்பம்

தசைப்பிடிப்பு

இதயம் வேகமாக துடிக்கும்

உங்களுக்கு பூச்சி கடித்து மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் மருத்துமனைக்கு சென்று அதற்கான சிகிச்சைகளை பெற வேண்டும்.

குளவி கடித்தற்கான அறிகுறிகள்:

குளவி கடித்த இடமானது தோல்  சிவந்து காணப்படும், மற்றும் அந்த இடமானது வீக்கமாக காணப்படும்.

கடித்த இடத்தில் வலி அதிகமாக இருக்கும்.

தேன் பூச்சி கடித்தால் அறிகுறிகள்:

தேன் கடித்த இடமானது தோல் சிவந்த நிறத்தில் காணப்படும்.

கடித்த இடம் வெள்ளையாக காணப்படும், மேலும் அரிப்பு ஏற்படும்.

உண்ணி பூச்சி கடித்தால் அறிகுறிகள்:

உண்ணி பூச்சி கடித்த இடத்தில் வீக்கம் காணப்படும்.

பூச்சி கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

இலவங்கப்பட்டை:

இலவங்கப்பட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அல்ர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருக்கிறது. இலவங்கப்பட்டையை நசுக்கி தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாகி கொள்ளுங்கள். அதனை பூச்சி கடித்த இடத்தில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து கழுவுங்கள் பூச்சி கடி அல்ர்ஜி நீங்கும்.

ஐஸ் பேக் ஒத்தடம்:

பூச்சிக்கடி ஏற்பட்ட உடன் அந்த இடத்தில் 20 நிமிடங்கள் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுங்கள். அது அந்தப் பகுதியை உணர்வு இல்லாமல் ஆக்கி வீக்கத்தை குறைக்க பயன்படுகிறது.

பப்பாளி:

பப்பாளி பழத்தில் உள்ள நொதிகள் பூச்சிக்கடியால் ஏற்படும் விஷத்தை முறியடிக்க உதவுகிறது. உடனடி நிவாரணத்திற்காக பூச்சியின் கொடுக்கு உள்ள இடத்தில் இந்த பழத் துண்டுகளை வெட்டி நிவாரணத்திற்கு வையுங்கள்.

வெங்காயம்:

இந்த காய்கறிகளில் என்சைம் அதிகளவு காணப்படுகிறது. இது அழற்சியை ஏற்படுத்தும் சேர்மங்களை உடைக்க உதவுகிறது. ஒரு வெங்காயத்தை வெட்டி அதை பூச்சி கடித்த இடத்தில் வைத்து தேய்க்கவும், அரிப்பு குறையும் வரை தேயுங்கள்.

துளசி இலைகள்:

சில துளசி இலைகளை எடுத்து நசுக்கி அதை காயத்தின் மீது வையுங்கள். கற்பூரம் மற்றும் தைமோல் போன்றவை அரிப்பு நீங்க உதவுகிறது.

புதினா:

புதினா உங்களுக்கு குளிர்ந்த தன்மையை அளிக்கக் கூடியது. இது அரிப்புகளை குறைப்பதன் மூலம் நிவாரணம் அளிக்க உதவுகிறது. துளசி இலைகளை எடுத்து நசுக்கி அதை பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து எண்ணெய்யை அப்ளை செய்யுங்கள்.

இந்தெந்த அறிகுறிகள் இருந்தா அது தொழுநோயாம் அது என்னென்ன அறிகுறிகள் என்று தெரிந்து கொள்ளுங்க

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement