வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சுதந்திர போராட்ட வீரர் மகாத்மா காந்தி பற்றிய 10 வரிகள்.!

Updated On: September 29, 2025 3:22 PM
Follow Us:
Gandhi Speech in Tamil 10 Lines
---Advertisement---
Advertisement

Gandhi Speech in Tamil 20 Lines | காந்தியடிகள் பற்றி 10 வரிகள்

நாட்டு விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி அவர்கள். இந்திய விடுதலை போராட்டத்தை தலைமையேற்று நடத்தி இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்ததால் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். அகிம்சைவழி போராட்டங்கள் மூலம் நம் நாட்டை ஆங்கிலேயரிடம் இருந்து மீட்டு தந்த தியாகி மகாத்மா காந்தி அவர்களின் பெருமையை சொல்ல புத்தகத்தின் பக்கங்கள் பத்தாது. எனவே பள்ளி மாணவர்களுக்கான மகாத்மா காந்தி பற்றிய 10 வரிகளை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

Mahatma Gandhi Speech 20 Lines in Tamil:

 mahatma gandhi speech 10 lines in tamil

  1. மகாத்மா காந்தி அவர்கள் 1869 ஆம் ஆண்டு அக்டோபர்  2 ஆம் தேதி அன்று குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கரம்சந்த் காந்தி மற்றும் அவரது தாயார் புத்லி பாய் ஆவார். இவரது தாய்மொழி குஜராத்தி ஆகும்.
  2. மகாத்மா காந்தி அவர்கள் 13 ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாய் என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மொத்தம் 4 ஆண் பிள்ளைகள்.மகாத்மா காந்தி அவர்கள் தனது 16 ஆம் வயதில் தந்தையை இழந்தார். பிறகு 18 வயதில் தனது பள்ளி படிப்பை முடித்த காந்தி அவர்கள் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார்,
  3. பிறகு, காந்தி ஜி அவர்கள் லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.மகாத்மா காந்தி அவர்கள் தென்னாப்பிரிக்காவில் சிவில் உரிமைகளுக்காக கடுமையாக போராடினர். 
  4. அரசியல் வாழ்க்கையில் நுழைந்த காந்தி அவர்கள் கோபால் கிருஷ்ணா கோகலேவை தனது அரசியல் வழிகாட்டியாக கருதினார்.
  5. ரவீந்திரநாத் தாகூர் என்பவர் காந்தி அவர்களுக்கு “மகாத்மா” என்ற பெயரினை வழங்கினார்.
  6. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு, ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய போராட்டங்களில் மிகவும் முக்கியமானது காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் தான்.
  7. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே ஆங்கிலேயர்கள் சொல்லப்படும் எந்தவொரு கூற்றுக்கும் இந்தியர்கள் யாரும் செவிசாய்க்க கூடாது என்பதே ஆகும்.
  8. காந்திஜி டூ அல்லது டை, பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறு போன்ற  கோஷங்களை எழுப்பி போராடினார். இவரது பல போராட்டங்களுக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றது. 
  9. இந்தியாவின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட மகாத்மா காந்தி அவர்கள் 1948 ஆம் ஆண்டு ஜனவரி30 ஆம் தேதி நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார்.
  10. இவர் மறைந்த நாளான ஜனவரி 30 ஆம் நாளை தியாகிகள் தினமாக கொண்டப்படுகிறது.  அவர்களது இந்த தியாகத்தை போற்றும் விதமாக தான் இவரது பிறந்தநாள் அக்டோபர்-2 காந்தி ஜெயந்தி எனும் பெயரில் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
  11. அவர் வகுப்புவாத நல்லினத்திற்கும் தீண்டாமையை ஒழிப்பதற்கும் கடுமையாக வாதித்தார்
  12. அவரது நடவடிக்கைகளுக்காக ஆங்கிலேயர்களால் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார்.
  13. அமைதி மீதான அவரது அவரது உறுதியான நம்பிக்கை அவரது எதிரிகளின் பாராட்டையும் பெற்றது.
  14. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் நெல்சன் மண்டேலா உற்பட பல தலைவர்களை அவர் ஊக்கப்படுத்தினார்.
  15. அவரது பிறந்த நாளான அக்டோபர் 2 சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது.
  16.  அவரது சுயசரிதையான சத்திய சோதனைகளின் கதை அவரது வாழ்க்கை பயணத்தை பற்றிய ஆழமான நுண்ணறிவை வழங்குகிறது.
  17. உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றாக இருங்கள் என்ற அவரது வார்த்தைகள், வாழ்க்கைக்கான அணுகுமுறையை வழங்குகிறது.
  18. மகாத்மா காந்தி உண்மை மற்றும் நீதியின் கொள்கைகளில் தனது ‘ அசைக்க முடியாத அர்பணிப்புக்காக மதிக்கப்பட்டார்
  19. அவரது வாழ்க்கையின் கொள்கையும் , நம்பிக்கையும் மற்றும் வலிமையின் அடையாளமாக தொடர்ந்து நீடிக்கிறது.
  20. அவர் எளிமையான வாழ்க்கை மற்றும் தன்னிறைவை ஆதரிப்பவராக இருந்தார், அடிக்கடி தனது துணிகளை நூற்பார்.
  21. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா சுதந்திரம்  பெற்று ஆங்கிலேயே அரசை வெளியேற செய்தார்.
  22. இவர் எதிர்ப்பாராத விதமாக 1948-ம் ஆண்டு ஜனவரி, 30 அன்று டெல்லியில் நாதுராம் கோட்சேவால் சூடு கொல்லப்பட்டார். இவர் மறைந்த தினத்தை தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
  23. இவர் செய்த தியாகத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
  24. 1942ல், இரண்டாம் உலகப் போரின்போது, ஆங்கிலேயர் ஆட்சியை உடனடியாக நிறுத்தக் கோரி, காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். இந்த இயக்கம் நாடு முழுவதும் வெகுஜன ஒத்துழையாமை மற்றும் வேலைநிறுத்தங்களைக் கண்டது.
  25. 1930-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து 240 மைல் தொலைவில் உள்ள தாண்டிக்கு 23 நாட்கள் பேரணியாகச் சென்று, மக்களின் ஆதரவுடன் அங்குள்ள கடல்நீரில் இருந்து உப்பைக் காய்ச்சி அங்கிருந்த அனைவருக்கும் உப்பை விநியோகித்தார்.

நம் வாழ்க்கைக்கு பயன்படும் ரூபாய் நோட்டுகளில் இன்றும் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார் நம் தேச தந்தை மகாத்மா காந்தி அவர்கள். இவரது இந்த கொள்கை இன்று உள்ள இளைஞர்களுக்கு மட்டும் அல்ல வருங்கால சந்ததிகளுக்கும் பயன்படும். எத்தனை தலைவர்கள் இந்நாட்டில் வாழ்ந்து மறைந்தாலும் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அதிகம் பேசப்படுவது “தேசத்தின் தந்தை” என போற்றப்படும் மகாத்மா காந்தி அவர்களை பற்றித்தான்.

மகாத்மா காந்தியின் சில பொன்மொழிகள்..!

இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க Tamil Katturai
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now