Thida Kalivu Melanmai Katturai in Tamil
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இன்றைய கட்டுரை பதிவில் திடக்கழிவு மேலாண்மை கட்டுரை பற்றி பார்க்கலாம் வாங்க. திடக்கழிவு (solid waste) என்பது பொதுவாக பயன்படாத, தேவையற்ற பொருளாகும். இது திரவமாகவோ அல்லது வாயுவாகவோ இல்லாதிருப்பின் இவற்றை திடக்கழிவுகள் என்று கூறுவார்கள். எனவே, இதனை பற்றிய தகவல்களை கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கட்டுரை என்பது மிகவும் முக்கியமான ஒன்று, பள்ளி படிக்கும் மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவர்க்கும் கட்டுரை முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஒரு தகவலினை நாம் தெரிந்துகொள்ளவோ அல்லது பிறருக்கு தெளிவாக எடுத்துரைக்கவோ கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நெகிழி கழிவு மேலாண்மை கட்டுரை:
குறிப்பு சட்டகம்
|
முன்னுரை:
உலகமானது, உயிர்கள் வாழக்கூடிய பல்வேறு இயற்கை அமைப்புகளை கொண்டுள்ளது. மனிதன் வாழ்வதற்குரிய சகல சிறப்பம்சங்களும் இந்த பூமியில் அதிமாக உள்ளன. மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க பூமி நிலப்பரப்பும் அசுத்தமாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும், குப்பைகள், கழிவுகள், மாசடைந்த சுற்றுசூழல் என பூமி அழுக்காக மாறிவிட்டது. இதனை சரிசெய்ய சிறந்த வழியாக இருப்பது திடக்கழிவு மேலாண்மை. திடக்கழிவு மேலாண்மை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்பது அவசியம்.
திடக்கழிவு மூலங்கள்:
வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள், போன்ற இடங்களில் மக்களால் பயன்படுத்தப்படும் பொருட்களான பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பொருட்கள், ரப்பர்கள், கடிதாசி போன்ற பொருட்கள் அவற்றின் பயன்பாடு முடிவுற்றதும் கழிவுகளாக வெறுமனே கொட்டப்படுகின்றன. அவ்வாறாக திடக்கழிவு பொருட்கள் எங்கெல்லாம் கிடைக்கிறது அது திடக்கழிவு மூலங்கள் எனப்படும்.
இவ்வாறன திடக்கழிவுகள் பல்வேறு இடங்களில் கொட்டப்படுகிறது. முக்கியமாக, வீதிகளின் இருமருங்குகளிலும், வெட்ட வெளிகளிலும் குப்பை மேடுகளாக காணப்படுகிறது. அதுமட்டுமில்லம்மாள் விவசாயகழிவுகள் மீளப்பயன்படுத்தாமல் வெறுமனே கொட்டப்படுகிறது.
உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை
திடக்கழிவுகளின் வகைகள்:
திடக்கழிவுகள் அதன் தன்மையை பொறுத்து இரண்டு வகைப்படடும். அவை பின்வருமாறு:
- சிதைவடையக் கூடியன
- சிதைவடைய முடியாதவை
சிதைவடையக் கூடியவை:
இறந்த விலங்குகளின் உடல்கள், தாவரக்கழிவுகள், விவசாய மற்றும் காய்கறி கழிவுகள் போன்றன நுண்ணங்கிகளினால் சிதைவடையக் கூடியவை ஆகும்.
சிதைவடைய முடியாதவை:
பிளாஸ்ரிக் கழிவுகள், பொலித்தீன், ரப்பர் மற்றும் டயர்கள், கண்ணாடிப் பொருட்கள், இரும்பு மற்றும் வெண்கல உலோகப்பொருட்கள் போன்றன சிதைவடைய முடியாதவையாகும்.
திடக்கழிவை மேலாண்மை செய்தல்:
திடக்கழிவை மேலாண்மை செய்தலில் திடக்கழிவுகளை சேகரித்தல், பிரித்தல், மீளப் பயன்படுத்தல் போன்றவை அடங்கும். அந்த வகையில் முதலில் திடக்கழிவுகளை ஒன்றாக சேர்க்கின்றனர். அதன் பிறகு, சிதைவடைவது மற்றும் சிதைவடையாதது என பிரித்து வகைப்படுத்தி வைக்கிறார்கள். சிதையக்கூடிய பொருட்கள் திறந்த வெளிமுறை மூலம் நுண்ணங்கிகளினால் உக்கச் செய்யப்படுவதோடு, நிலத்தில் புதைத்தும் பாதுகாக்கப்படுகின்றன. கண்ணாடி மற்றும் உலோகப் பொருட்கள் மீள்சுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவதோடு சீமேந்து மற்றும் கட்டட கழிவுகள் தூளாக்கப்பட்டு மீள்பயன்பாட்டிற்கு உட்படுகின்றன.
திடக்கழிவு மேலாண்மையின் பயன்கள்:
- திடக்கழிவு மேலாண்மை செய்வதன் மூலம் அதிகப்படியான குப்பைகள் சேர்வது தடுக்கப்படுகிறது.
- குப்பையினால் மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள் குறைகிறது.
- பிளாஸ்ரிக் மற்றும் பாலித்தீன் வகைகள் மீள்பயன்பாட்டிற்கு உட்படும் போது சூழல் மாசடைதல் தவிர்க்கப்படுகின்றது.
முடிவுரை:
திடக்கழிவு மேலாண்மை ஒவ்வொரு மனிதர்க்கும் நாட்டிற்கும் இந்த உலகத்திற்கும் பல்வேறு நண்மைகளை அளிக்கிறது. ஆகையால், இதனை கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் திடக்கழிவுகளை சரியான விதத்தில் மேலாண்மை செய்ய வேண்டும்.
நான் மாவட்ட ஆட்சியர் ஆனால் கட்டுரை!
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |