சுந்தர் பிச்சை வாழ்க்கை வரலாறு | Sundar Pichai Success Story in Tamil | Sundar Pichai History in Tamil
நம் தமிழ்நாட்டில் மக்களை எப்போதும் பின் தங்கிய நிலையிலே வைத்திருந்தார்கள். அந்த நிலையினை தகர்த்து நம் தமிழராலும் அனைத்து துறையிலும் சாதிக்க முடியும் என்று நிருபித்து காட்டியவர் கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. ஒருவர் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுடைய வளர்ச்சியினை மட்டும் நாம் பார்க்க கூடாது, அதற்காக அவர்கள் எடுத்த முயற்சியையும் நாம் முதலில் பார்க்க வேண்டும். யாராக இருந்தாலும் நல்ல நிலைமைக்கு வருவதற்கு அவர்கள் மிகவும் போராடித்தான் வந்து இருப்பார்கள். அந்த வகையில் நாம் இன்றைய கதை பகுதியில் சுந்தர் பிச்சை அவர்கள் அவருடைய வாழ்க்கை பாதையில் நடந்த தோல்வி மற்றும் வெற்றி பாதைகளை படித்து தெரிந்துக்கொண்டு நாம் ஒவ்வொருவரும் சாதனையாளராக மாறுவோம்..!
சாதனை பெண்கள் பட்டியல் |
சுந்தர் பிச்சையின் இளமை கால நிகழ்வு:
சென்னை மாவட்டத்தில் 1972-ஆம் ஆண்டு சுந்தர் ரகுநாத பிச்சை மற்றும் தாய் லட்சுமி என்பவருக்கு பிறந்தவர். சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் மின் பொறியாளராக வேலை பார்த்தவர். தாய் லட்சுமி சுருக்கெழுத்தாளர். சுந்தர் பிச்சையின் குடும்பம் மிகவும் நடுத்தரத்தில் உள்ளவர்கள் தான். சுந்தர் பிச்சை சென்னை அசோக் நகரில் சாதரணமான இரண்டு அறை உள்ள வீட்டில் தான் வசித்து வந்தவர். சுந்தர் பிச்சை அவர்கள் சிறு வயதிலிருந்தே கூச்ச சுபாவம் உடையவராக இருந்தாலும் அவருடைய குறிக்கோளில் ஆர்வமாக இருந்தார். அவரின் 12 வயது வரை தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி என்று எந்த இணையதளங்களும் இல்லை.
சுந்தர் பிச்சையின் தந்தை ஒரு ஸ்கூட்டர் வாங்க அவருடைய சம்பள பணத்தை மூன்று மாதம் சேமித்தால் தான் வாங்க முடியும் என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால் சுந்தர் பிச்சையின் தந்தையோ தன் பிள்ளைகளுடைய படிப்பிற்காக தனது மொத்த சம்பள பணத்தையும் செலவழித்தார். சுந்தர் பிச்சையுடன் படித்த நண்பர்கள் அவரை அந்த அளவிற்கு மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ளவில்லை.
இதற்கு என்ன காரணம் என்னவென்றால் சுந்தர் பிச்சை அவர்கள் பள்ளியில் படிக்கும் போது கல்வியறிவில் அந்த அளவிற்கு சிறந்து விளங்கவில்லை. கல்வியில் படிக்கும் போது சிறந்து விளங்கவில்லை என்றாலும் தனது கல்லூரி படிப்பில் நன்றாக சிறந்து விளங்கினார் சுந்தர் பிச்சை.
சுந்தர் பிச்சையின் கல்வி நிலை:
சுந்தர் பிச்சை அவர்கள் ஜவஹர் வித்யாலயா பள்ளியில் தனது 10-ஆம் வகுப்பினை முடித்தார். ஐ.ஐ.டி சென்னை வளாகத்தில் உள்ள வனா வாணி மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை படிப்பை படித்தார். தனது மெட்டல் அலர்ஜிக்கல் பொறியியல் (Metallurgical Engineering) படிப்பை ஐஐடி கரக்பூரில் முடித்தார்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மெடிரியல் பொறியியலில் (Material Sciences and Engineering) முதுகலை படிப்பை படித்தார். வார்டன் ஸ்கூல் ஆப் பென்சில்வேனியாவில் (Wharton School of the University of Pennsylvania) எம்.பி.ஏ படித்தார்.
கூகுள் உருவான வரலாறு |
உலகின் மிகப்பெரிய கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை பங்கு:
2004-ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை அவர்கள் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். கூகுள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு சுந்தர் பிச்சை மெக்கென்சி நிறுவனத்தில் மேலாண்மை ஆலோசகராக வேலை செய்து கொண்டிருந்தார். அந்த நிறுவனத்தில் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.
அக்டோபர் 2006-யில் கூகுளின் அழிவை தடுத்து நிறுத்தியவர் சுந்தர் பிச்சை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முடிவே கூகுளின் இக்கட்டான சூழ்நிலைக்கு காரணம். மைக்ரோசாப்ட் விண்டோசின் தேடு பொறியை கூகுளில் இருந்து அவர்களின் bing-க்கு மாற்றினார்கள். இதன் விளைவாக 400 மில்லியன் வாடிக்கையாளர்களை கூகுள் நிறுவனம் இழந்தது. சுந்தர் பிச்சை எடுத்த கடும் முயற்சியின் மூலம் கூகுள் நிறுவன அழிவை முற்றிலும் தடுத்து நிறுத்தினார்.
தன்னம்பிக்கை கதைகள் |
பொறுப்புகள்:
- கூகுள் நிறுவனத்தால் சுந்தர் பிச்சை 2008-ம் ஆண்டில் தயாரிப்பு மேம்பாட்டு துறையில் துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
- அதே ஆண்டில் Chrome and apps-யில் மூத்த துணை தலைவராக சுந்தர் பிச்சை நியமனம் செய்யப்பட்டார்.
- இதுமட்டுல்லாமல் Google Drive பொறுப்பும் சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டது.
- ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தை உருவாக்கிய ஆண்டி ரூபின் என்பவர் 2013-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்திலிருந்து விலகிவிட்டார். விலகியவுடன் கூகுளின் நிறுவனரான லாரி பேஜ் சுந்தர் பிச்சையிடம் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் பொறுப்பையும் ஒப்படைத்தார்.
- அக்டோபர் 2014 இல் கூகுளின் தயாரிப்பு துறையில் தலைமை பொறுப்பில் (Product Chief) சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். கூகுளின் முக்கிய அம்சமாக கூகுள் chrome, ஆண்ட்ராய்டு, Chrome OS போன்ற பல பயன்பாடுகளை வெற்றி பெற செய்தவர்.
சுந்தர் பிச்சை சம்பளம் எவ்வளவு:
சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் ரூ.335 கோடி. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சுந்தர் பிச்சைக்கு 2,73,328 கிளாஸ் சி பங்குகள் வழங்கியுள்ளது. இதன் மதிப்பு 199 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1,353 கோடி).
இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை வைத்திருந்த பங்கு மதிப்புடன் சேர்த்து அவரது மொத்த பங்கு மதிப்பு 650 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
சுந்தர் பிச்சையின் வெற்றி:
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை 2015-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.
Microsoft நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு சத்திய நாதல்லாவுக்கு (Satya Nadella) ஒரு மாற்றாகவும் சுந்தர் பிச்சை இருந்தார். ட்விட்டர் (Twitter) நிறுவனம் சுந்தர் பிச்சைக்கு வலை வீசி கொண்டு இருந்தது. கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சையை இழப்பதாக இல்லை. இதனால் கூகுள் நிறுவனத்தின் மூலம் சுந்தர் பிச்சைக்கு சம்பளமானது உயர்ந்து கொண்டே இருந்தது.
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனம் சுந்தர் பிச்சைக்கு 1,353 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அளித்ததன் மூலம் அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் பெறும் நிர்வாகியானார்.
Jive Software Inc-ன் இயக்குனராக இருந்தார். Ruba Inc நிறுவனத்தின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். சுந்தர் பிச்சை ஒரு தமிழனின் மிகப்பெரிய வெற்றியாளர் என்பது தமிழ்நாட்டிற்கு பெருமைக்குரிய விஷயமாகும். அவர் செய்த கடின முயற்சி நாட்டிற்கே வெற்றியை தேடி தந்தது.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |