போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட
நம் முன்னோர்களின் காலத்தில் கரண்ட் இல்லாவிட்டால் வெளியில் வந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் பேசுவார்கள், ஆனால் இன்றைய கால கட்டத்தில் என்ன நடந்தாலும் வெளியில் வருவதில்லை. காரணம் என்ன தெரியுமா அதாங்க ஸ்மார்ட் போன் தான். இந்த ஸ்மார்ட் போன் இருந்தால் பசி, தூக்கம், அன்பு போன்ற எதுமே தேவையில்லை. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போனுக்கு அடிமையாகி விடுகிறார்கள். இதிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் மறுபடியும் சில ஆப்ஸ்களிலிருந்து வெளியில் வர முடிவதில்லை. அதனால் தான் இந்த பதிவில் போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கு நமது போனிலே உள்ள settings-யை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Focus Mode Settings in Android Phone:
இந்த settings enable செய்வதன் மூலம் உங்களை போனில் மூழ்கவிக்கும் நோட்டிபிகேஷன்கள் அனைத்தையும் தடுக்கிறது. அத்துடன் உங்களுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தும் எல்லா செயலிகளையும் விரைவாக பிளாக் செய்வதற்கு இது பயன்படுகிறது. இந்த Focus Mode ஆப்ஷனை 5 நிமிடம் முதல் அதிகபட்சம் 3 மணி நேரம் வரை இயக்க முடியும். இந்த குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் சாதனத்திற்கு எந்த நோட்டிபிகேஷனும் வராது. இந்த செட்டிங்ஸை எப்படி ஆன் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
முதலில் போன் Settigns-கு செல்லவும், அதில் Digital Wellbeing and Parent Control என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
பின் அதில் கீழே ஸ்குரோல் செய்தால் Focus Mode என்று இருக்கும், அதை கிளிக் செய்யவும்.
Focus Mode கிளிக் செய்ததும் உங்க போனில் உள்ள ஆப்கள் அனைத்தும் வந்திருக்கும். அதில் நீங்கள் எதை பிளாக் செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதை செலக்ட் செய்து எவ்வளவு நேரம் என்பதையும் செல்கட் செய்ய வேண்டும்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க இன்னமுமா கடைக்கு போறீங்க..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |