மல்லிகை பூ என்ற பெயர் வந்தற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

What is the Reason for the Name Jasmine Flower Come About in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் சுவாரசியமாக மற்றும் பயனுள்ளதாகவும் அமையும். பொதுவாக நாம் அனைவருக்குமே பல கேள்விகள் இருக்கும். அப்படி ஏற்படும் அனைத்து கேள்விகளுக்கு நமக்கு விடை கிடைத்து விட்டதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் நமது பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் நாம் அனைவருக்குமே மிக பிடித்த மல்லிகை பூவிற்கு எப்படி பெயர் வந்தது என்று தான் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

மல்லிகை பெயர் வந்தற்கான காரணம்.?

What is the Reason for the Name Jasmine Flower Come About in Tamil

பொதுவாக பெண்களுக்கு பூக்கள் என்றாலே மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக மல்லிகை பூ என்றால் பிடிக்காத ஆளே இருக்கவே மாட்டார்கள். அப்படி அனைவருக்கும் மிகவும் பிடித்த பூக்களான மல்லிகைக்கு எப்படி பெயர் வந்தது என்றாவது சிந்தனை செய்திருக்கிறீர்களா..?

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> மல்லிகை பூவின் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

அப்படி சிந்தனை செய்தவர்களுக்கெல்லாம் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். மல்லிகையின் உண்மையான வரலாறு பாரசீக வணிகர்கள் ஒரு டஸ்கன் தோட்டக்காரருக்கு ஒரு மல்லிகைச் செடியை வழங்கினர். அவர் அந்த செடியினை தனது தனிப்பட்ட தோட்டத்தில் நட்டார்.

அவருடைய செடியை மற்றவர்கள் பார்க்க கூட மறுத்தார். அது பூத்தவுடன், தோட்டக்காரர் அதன் வாசனையால் மிகவும் ஈர்க்கப்பட்ட தனது காதலிக்கு அதை வழங்கினார். அவள் அதை பெற்று கொண்டு அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டாள்.

 அந்த தோட்டக்காரர் தான் இதற்கு மல்லிகை என்ற பெயரை சூட்டினார் என்று கூறப்படுகின்றது.  மல்லிகை என்ற வார்த்தை தூய்மையான அன்பு, எளிமை, அடக்கம் மற்றும் வலிமையை குறிக்கிறது.

மல்லிகை பூவின் ஆங்கில மொழி பெயரான ‘ஜாஸ்மின்’ என்ற பெயர் பாரசீக வார்த்தையான ‘யாஸ்மின்’ என்பதிலிருந்து உருவானது இதற்கான அர்த்தம் கடவுளின் பரிசு என்பதாகும். மல்லிகையில் சுமார் 200 இனங்கள் உள்ளது.

இந்தியாவில் மல்லிகை:

இந்தியாவில் மல்லிகை வேத காலத்திலிருந்து இருந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் இதன் சாகுபடி கி.மு 5 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் மதுரை நகரத்தை சுற்றி வளர்ந்தது என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> மல்லிகை செடிக்கு இதை மட்டும் ஒரு கிளாஸ் கொடுங்க பூக்காத செடியும் பூத்துக் குலுங்கும்

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 

 

Advertisement