இயற்கையான பொலிவிற்க்கு
நாம் அனைவரும் விரும்புவது ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை தான். பளபளப்பான சருமத்திற்கான எண்ணற்ற கிரிம்கள் சந்தையில் உள்ளன. அவை நமது சரும ஆரோக்கியத்திற்கு பொருத்தமானத என்றால் கேள்விக்குறி தான். என்ன தான் விலை உயர்ந்த பல பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் இயற்கை பொருட்களில் கிடைக்கும் சரும பொலிவு அதில் கிடப்பது இல்லை. விலையுயர்ந்த பொருட்களில் ஏற்படும் சரும பொலிவு சில மணி நேரங்களுக்கு மட்டும் தான். ஆனால் இயற்கை பொருட்களில் உள்ள சத்துக்கள் உங்கள் சருமத்தை எப்போதும் இயற்கையான பொலிவுடன் வைத்துக்கொள்ள உதவும். அப்படி உங்கள் சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள சில இயற்கை குறிப்புகள் உங்களுக்காக.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
முகத்தை நிரந்தரமாக பளபளப்பாக வைத்து என்ன செய்ய வேண்டும்:
இயற்கை பொருட்கள் கொண்டு வீட்டு வைத்தியம்:
மஞ்சள்:
மஞ்சள் நோய் எதிர்ப்பு குணம் உடையது. மஞ்சள் உங்கள் சருமத்தில் உள்ள மாசுகளை எளிதில் நீக்கும். மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்பு சருமத்தில் உள்ள இறந்த செல்களை அளித்து புது செல்களை உருவாக்கும்.
செய்முறை:
பாத்திரத்தில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் கலந்த பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து பின்னர் முகத்தினை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்யவும் போது முகம் இயற்கை பொலிவுடன் இருக்கும்.
கற்றாழை சாறு:
கற்றாழை சாறு உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்க கூடியது. கற்றாழை சாறு முகத்தில் தேங்கும் எண்ணெய் பிசு பிசுப்பை குறைக்கும். கற்றாழை ஜெல் உடன் மஞ்சள் கலந்து அதனை நேரடியாக முகத்தில் தடவி, 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் இயற்கை பொலிவுடன் இருக்கும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |