How to Make Aloe Vera Face Pack For Pimples
முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு முகப்பரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதற்காக பல கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி முகப்பரு பிரச்சனையை சரி செய்வீர்கள். ஆனால் கெமிக்கல் நிறைந்த பொருட்களை அவ்வப்போது சரியானாலும் நாளடைவில் முகத்தில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இந்த பதிவில் கற்றாழையை வைத்து முகப்பருவை எப்படி நீக்குவது என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Use Aloe Vera Face Pack:
கற்றாழையில் அலர்ஜி எதிர்ப்பு பண்பை எதிர்த்து போராடும்ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. மேலும் கற்றாழை இரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்தும் பாக்ட்ரியாக்களை அளித்து முகப்பருவை தடுக்க உதவுகிறது.ஒரு கற்றாழையை எடுத்து தோல்களை நீக்கி உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த ஜெல்லை எடுத்து முகத்தில் அப்ளை செய்யவும்.
கற்றாழை மற்றும் தேன்:
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் இலவங்கப்பட்டை சிறிதளவு எடுத்து அரைத்து கொள்ளவும். இதிலிருந்து 1/4 தேக்கரண்டி எடுத்து முகத்தில் அப்ளை செய்து 5 அல்லது 10 நிமிடங்கள் வரை அப்படியே விடவும். பிறகு கற்றாழை பேக்கை முகத்தில் அப்ளை செய்து காய்ந்ததும் கழுவி கொள்ளவும்.
இந்த பொருள் மட்டும் போதும்..! இரண்டே நாட்களில் கரும்புள்ளிகள் மாயமாய் மறைந்துவிடும்..!
கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறு:
ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி, எலும்பிச்சை சாறு 2 தேக்கரண்டி எடுத்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும்.
கற்றாழை | சர்க்கரை | தேங்காய் எண்ணெய்:
சர்க்கரை முகத்தில் இறந்த செல்களை நீக்கி புத்துணர்ச்சியாக மாற்றுகிறது. தேங்காய் எண்ணெய் பாக்ட்ரியா எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளது. இந்த மூன்று பொருட்களும் சேரும் போது முகத்தில் உள்ள பருக்களை நீக்கும்.ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 1/2 தேக்கரண்டி சர்க்கரை, 1/4 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் கண் பகுதியை தவிர மற்ற பகுதியில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி கொள்ளலாம்.
பாலை முகத்தில் இப்படி அப்ளை செய்தால் இவ்வளவு அதிசயம் நடக்குமா.!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |