அரிசியில் வண்டு, பூச்சிகள் வராமல் தடுப்பதற்கான சில எளிமையான குறிப்புகள்..!

Advertisement

How to Protect Rice from Insects at Home in Tamil

இந்த உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் உணவு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம். அதேபோல் தான் நமது மனித இனத்திற்கும் உணவு என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அப்படி நமக்கு மிகவும் முக்கியமான உணவினை தயாரிக்க பயன்படும் அனைத்து உணவு பொருட்களும் நாம் மிக மிக கவனமாக வைத்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக நமது இந்தியாவில் அதிக அளவு உட்கொள்ளப்படுவது அரிசியால் செய்யப்பட்ட உணவுகள் தான்.

அப்படி நமது நாட்டின் மிகவும் முக்கியமான உணவு பொருளான அரிசியை அனைவருமே தங்களின் வீட்டின் தேவைக்காக வாங்கி சேகரித்து வைத்திருப்போம். அப்படி வைத்திருக்கும் அரிசியில் சில நாட்களுக்கு பிறகு வண்டு மற்றும் பூச்சிகள் வந்துவிடும் அதனை போக்குவதற்காக நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொள்ளுவோம். அப்படி நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் சென்று முடியும். அதனால் தான் இன்று நமது வீட்டில் உள்ள அரிசியில் வண்டு மற்றும் பூச்சிகள் வராமல் தடுப்பதற்கு உதவும் சில எளிமையான குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl 

How to Remove Insects from Rice in Tamil:

How to Remove Insects from Rice in Tamil

எளிமையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள அரிசியில் உள்ள வண்டு மற்றும் பூச்சிகளை போக்கி மறுமுறை வராமல் தடுப்பதற்கான சில குறிப்புகளை இங்கு விரிவாக காணலாம் வாங்க

டிப்ஸ் – 1:

நாம் முதலாவது பார்க்க இருக்கும் டிப்ஸிற்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தால் 5 முதல் 6 காய்ந்த மிளகாய் தான். முதலில் நீங்கள் அரிசி வைக்கும் பாத்திரத்தை நன்கு சுத்தம் செய்துவிட்டு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 5 முதல் 6 காய்ந்த மிளகாய்களை போட்டு கொள்ளுங்கள். பிறகு அதில் நாம் வாங்கிவைத்துள்ள அரிசியை கொட்டி வைத்து கொள்ளுங்கள்.

டிப்ஸ் – 2:

அடுத்த டிப்ஸிற்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தால் 1 கைப்பிடி அளவு வேப்பிலை மற்றும் 4 முதல் 5 சிறிய துண்டு வேப்பமர குச்சிகள் தான். முதலில் நீங்கள் எப்பொழுது அரிசி வைக்கும் பாத்திரத்தில் அரிசியை கொட்டி கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு சிறிய துண்டு வெள்ளை துணியில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு வேப்பிலை சேர்த்து ஒரு மூட்டைபோல் கட்டி கொள்ளுங்கள். பிறகு இந்த மூட்டையை நீங்கள் கொட்டிவைத்துள்ள அரிசியின் நடுவில் வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் நாம் எடுத்து வைத்துள்ள 4 முதல் 5 சிறிய துண்டு வேப்பமர குச்சிகளையும் அரிசியின் நடுவில் சொருகி வைத்து கொள்ளுங்கள்.

அரிசி முதல் கோதுமை மாவு வரை பூச்சிகள் வராமலும், நீண்ட நாட்களுக்கு உழைத்து வரவும் இப்படி பண்ணுங்க

டிப்ஸ் – 3:

இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தால் 4 பிரிஞ்சி இலை அல்லது பிரியாணி இலை தான். இதனையும் நீங்கள் பாத்திரத்தில் கொட்டிவைத்துள்ள அரிசியின் நடுவில் வைத்து கொள்ளுங்கள்.

டிப்ஸ் – 4:

இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்றால் 4 ஏலக்காய், 10 கிராம்பு மற்றும் ஒரு சிறிய துண்டு வெள்ளை துணி ஆகியவை தான். முதலில் நாம் எடுத்து வைத்துள்ள ஒரு சிறிய துண்டு வெள்ளை துணியில் 4 ஏலக்காய், 10 கிராம்பு சேர்த்து ஒரு மூட்டையாக கட்டி கொள்ளுங்கள்.

இதனையும் உங்களின் வீட்டில் உள்ள அரிசியின் நடுவில் சொருகி வைத்து கொள்ளுங்கள்.

மேலே கூறியுள்ள அனைத்து குறிப்புகளும் உங்கள் வீட்டின் அரிசியில் வண்டு மற்றும் பூச்சிகள் வராமல் தடுக்க உதவும்.

இவ்வாறு சேமிக்க தொடங்கினீர்கள் என்றால் கூடிய விரைவில் உங்களின் கனவு வீட்டினை வாங்கி விடலாம்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement