இட்லி மாவு ஒரு வாரத்திற்கு மேல் புளிக்காமல் இருக்க இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..! Idli Maavu Pulikamal Iruka Tips in Tamil..!
இன்றைய அவசரமான உலகில் பலரும் சமைப்பதற்கு பதில் இன்ஸ்டண்டாக உணவுகளை தயார் செய்து வைத்துக்கொள்கின்றன. அந்த வகையில் பல பெண்கள் இட்லி மாவை ஒரு வாரத்திற்கு தேவையான அளவு அரைத்து வைத்துக்கொள்கின்றன. இந்த இட்லி மாவு காலை மற்றும் இரவு நேரங்களுக்கு டிப்பனாக செய்து கொடுக்கின்றன. தற்பொழுது வெயில் காலம் வேற ஆரம்பித்துவிட்டது. ஆக நாம் என்னதான் பிரிட்ஜ் வைத்திருந்தாலும், அவற்றில் வைத்தால் கூட மாவு இரண்டு நாட்களுக்கு மேல் புளித்துவிடும். இன்றைய பதிவில் இட்லி மாவு ஒரு வாரத்திற்கு மேல் புளிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
Idli Maavu Pulikamal Iruka Tips:
டிப்ஸ்: 1
குறைந்தது அரிசி மற்றும் உளுந்து மூன்று மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். அதைவிட மிகவும் குறைவாக ஊறினால் பிறகு மாவு புளித்து போக வாய்ப்பு உள்ளது.
டிப்ஸ்: 2
உளுந்து அரைக்கும்போது கைவிடாமல் தண்ணீர் இடையிடையே தெளித்து தெளித்து ஒரு பிளாஸ்டிக் கரண்டி அல்லது மரக்கரண்டி எடுத்து தள்ளி தள்ளி விட்டு அரைக்கலாம். மாவில் கையை மட்டும் உபயோகப்படுத்த வேண்டாம்.
டிப்ஸ்: 3
உளுந்து அரைத்து முடித்ததும், கைகளை ஒரு முறை நன்கு சுத்தம் செய்து விட்டு உளுந்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கிரைண்டரில் இருந்து மாவை எடுக்கும்போது மட்டும் தான் கையை உபயோகிக்க வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சமைக்க தெரிந்தவர்களுக்கு இது தெரியாமல் இருந்தால் எப்படி.! சமைக்க தெரியும் என்று சொல்வதில் அர்த்தமில்லை..
டிப்ஸ்: 4
உளுந்து மாவு அரைத்த பிறகு அரிசியை அரைக்கவும், அரிசியையும் கைபடாமல் அரைக்கவும். அரிசி அரைந்து முடிந்ததும் மாவை கிரைண்டரில் எடுக்காமல் ஏற்கனவே நாம் அரைத்து எடுத்து வைத்திருந்த உளுந்தையும் அரிசியுடன் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் அளவுக்கு ஆட்டி எடுக்க வேண்டும். இப்படி செய்வதினால் கைகளால் நாம் மாவை கலந்துவிட வேண்டிய அவசியம் இருக்காது.
எனவே மாவு ஒன்றாக கலந்த பிறகு மாவு ஸ்டோர் செய்யும் பாத்திரத்தில் கைபடாமல் மாவை எடுத்துக்கொண்டு உப்பு சேர்க்காமல் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். மீதமுள்ள மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்க்காமல் மூடி வைத்து ஃப்ரிட்ஜில் அப்படியே எடுத்து வைத்து விடுங்கள்.
ஃப்ரிட்ஜில் இருக்கும் ஸ்டோர் செய்து வைத்த மாவை உங்களுக்கு எப்போது தேவையோ, அப்போது மட்டும் வெளியே எடுத்து வைத்து உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்துவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் வெளியே எடுத்து வைத்து விடுங்கள். அப்போது தான் உங்களுக்கு தேவையான அளவுக்கு மாவு புளித்து வரும்.
டிப்ஸ்: 5
உளுந்து மற்றும் அரிசி அரைக்கும் போது தேவையான அளவு தண்ணீர் தெளித்துவிடுகையில் ஐஸ் வாட்டரை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
டிப்ஸ்: 6
இட்லி மாவு நீண்ட நாட்கள் புளிக்காமல் இருக்க சில்வர் பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு பதில் பிளாஸ்டிக் டப்பாவை பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உப்பு கறை படிந்த பாத்ரூமை சிரமம் இல்லாம இப்படி கிளீன் பண்ணுங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |