வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

துரு பிடித்த பாத்திரத்தை ஈசியா பளிச்சென்று ஆக்கலாம்..

Updated On: July 27, 2023 9:34 AM
Follow Us:
remove rust from vessels in tamil
---Advertisement---
Advertisement

துரு பிடித்த பாத்திரத்தை என்ன செய்வது 

பொதுவாக நாம் காசு கொடுத்து வாங்கும் பாத்திரங்களை பார்த்து பார்த்து வைத்திருப்போம். அதில் சிறியதாக கீறல் பட்டாலும் நம்மால் தாங்க முடியாது. அது போல சில பாத்திரங்கள் நாம் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் துரு பிடிக்க ஆரம்பித்து விடும். அவை சமையல் பாத்திரங்களாக இருந்தாலும் சரி, விவசாயத்திற்கு பயன்படுத்தும் கருவிகளாக இருந்தாலும் சரி துரு பிடித்து விடும். இதனை கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டால் பாத்திரம் ஓட்டையாகிவிடும். அதனால் தான் இந்த பதிவில் துரு பிடித்த பாத்திரத்தை எப்படி பளிச்சென்று வைப்பது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

பாத்திரங்களில் உள்ள துருவை நீக்க:

பேக்கிங் சோடா:

பாத்திரங்களில் உள்ள துருவை நீக்க

துரு பிடித்த பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் பேக்கிங் சோடாவை தூவி விட்டு 1 மணி நேரம் அப்படியே விடவும். ஒரு மணி நேரம் கழித்து ஸ்கிரப் பயன்படுத்தி பாத்திரத்தை நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு தண்ணீரை கொண்டு அலச வேண்டும். பேக்கிங் சோடாவிற்கு துருவை அகற்றும் தன்மை உடையது.

வினிகர்:

பாத்திரங்களில் உள்ள துருவை நீக்க

துரு பிடித்த பாத்திரத்தில் வினிகரை ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 1/2 மணி நேரம் கழித்து ஸ்கிரப் பயன்படுத்தி பாத்திரத்தை நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு பாத்திரம் தேய்க்கும் சோப்பை பயன்படுத்தி ஒரு முறை பாத்திரத்தை வழக்க வேண்டும். பிறகு தண்ணீரை ஊற்றி கழுவி விட்டு காட்டன் துணியால் ஈரம் இல்லாமல் துடைத்து விட வேண்டும்.

பாத்திரம் அடிபிடிக்காமல் எப்படி சமைப்பது தெரியுமா..?

எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா:

பாத்திரங்களில் உள்ள துருவை நீக்க

சாதரணமாக வீட்டில் அடி பிடித்த பாத்திரம் இருந்தாலே அதில் எலுமிச்சை சாறை ஊற்றி சிறிது நேரம் கழித்து பாத்திரத்தை வழக்கினால் பாத்திரம் பளிச்சென்று மாறிவிடும். அடி பிடித்த பாத்திரம் மட்டுமில்லை துரு பிடித்த பாத்திரத்தையும் நீக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு.

அதற்கு ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை துரு பிடித்த பாத்திரத்தில் அப்ளை செய்து 1 மணி நேரம் அப்படியே விடவும். 1 மணி நேரம் கழித்து பாத்திரத்தில் ஸ்கிரப்பை பயன்படுத்தி தேய்த்து விட்டு கழுவினால் பாத்திரம் பளிச்சென்று மாறிவிடும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதவாது ஒன்றை பயன்படுத்தினால் மட்டும் போதும் பாத்திரத்தில் உள்ள துரு நீங்கி பளிச்சென்று மாறிவிடும்.

பாத்திரம் ஓட்டை ஆகிவிட்டால் தூக்கி போடாதீங்க..! நாமே சரி செய்து விடலாம்..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

kungumam thayarippathu eppadi

குங்குமம் தயாரிப்பது எப்படி.?

how to clean ceiling fan blades in tamil

5 நிமிடத்தில் Ceiling Fan -ஐ சுத்தம் செய்வது எப்படி.?

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

How to Clean Water Tank in Tamil

வாட்டர் டேங்க் சுத்தம் செய்வது எப்படி .? | How to Clean Water Tank in Tamil

how to reduce current bill in home in tamil

உங்க வீட்ல மின் கட்டணத்தை குறைப்பதற்கான எளிய வழிகள்

how to store coconut for long time in tamil

நீண்ட நாட்கள் வரை தேங்காய் கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்..!

உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

arisiyil vandu varamal iruka

அரிசி பானையில் வண்டு மற்றும் பூச்சி வராமல் இருக்க ஒருவாட்டி இதை செய்யுங்க போதும்..!

அவசியம் இந்த கிச்சன் டிப்ஸை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.. உங்கள் வேலையை எளிதாக்கும்..!