Removing Stains from White Clothes Tips and Tricks in Tamil
இன்றைய சூழலில் பெண்கள் இந்த சமூகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் பற்பல சாதனைகளையும் வெற்றிகளையும் செய்து கொண்டும் அடைந்து கொண்டும் இருக்கின்றார்கள். அப்படி பல சாதனைகளை படைத்த பெண்கள் கூட வீட்டில் உள்ள வேலையை செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுவார்கள் அல்லது பயப்படுவார்கள். ஏனென்றால் பொதுவாக நாம் நமது வீடுகளில் உள்ள இல்லத்தரசிகளே பார்த்தாலே நமக்கு தெரியும் ஏனென்றால் இல்லத்தரசிகள் காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்வதற்கு வரை அதிக அளவு வேலைகளை செய்து கொண்டே தான் உள்ளார்கள். அதிலும் அவர்கள் பார்க்கின்ற சில வேலைகள் எல்லாம் மிக மிக கடினமான வேலையாக இருக்கும். அப்படி அவர்களுக்கு மிக கடினமான வேலை என்றால் அது துணி துவைப்பது தான். அதிலும் துணி துவைக்கும் பொழுது ஒரு அடையில் உள்ள சாயம் மற்றொரு அடையில் படிந்து கொண்டால் அதனை போக்குவது இன்னும் சிரமம். அதிலும் குறிப்பாக அது வெள்ளை நிற ஆடை என்றால் நமது பாடு பெரும்பாடாகிவிடும். அதனால் தான் இன்றைய பதிவில் வெள்ளை சட்டையில் படிந்துள்ள சாய கறையை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வெள்ளை சட்டையில் சாயம் எடுப்பது எப்படி:
பொதுவாக வெள்ளை நிற அடையில் மற்ற ஆடைகளின் நிறம் ஒட்டி கொள்வது என்பது மிகவும் சகஜமான ஒரு விஷயம் தான். அதனை போக்குவதற்குள் நமக்கு தான் பெரிய பிரச்சனை ஆகிவிடும்.
அதனால் தான் வெள்ளை சட்டையில் படிந்துள்ள சாய கரையை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை பழம் – 1
- சலவைத்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- பிளீச்சிங் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
இரண்டே நிமிடத்தில் கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற இப்படி செய்யுங்க
செய்முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி கறைபடிந்துள்ள வெள்ளை நிற சட்டையில் எங்கெல்லாம் சாயம் படிந்துள்ளதோ அங்கெல்லாம் அதனின் சாற்றினை பிழிந்து நன்கு தேய்த்து நன்கு கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு வாலியை எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் சலவைத்தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து அதில் கறைபடிந்துள்ள வெள்ளை நிற சட்டையை சேர்த்து 1 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதனை எடுத்து லேசாக தேய்த்து துவைத்தலே அதில் உள்ள கறைகள் எளிதில் நீங்கிவிடும்.
மாதக்கணக்கில் கொத்தமல்லி கெடாமல் இருக்க 1 ஸ்பூன் மஞ்சள் மட்டும் போதும்
கை வைக்காமலே வெறும் 2 நிமிடத்தில் கேஸ் பர்னரை புத்தம் புதுசு போல மற்ற இந்த ஒரு பொருள் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |