எப்பாடி உப்பு சமைக்கிறதுக்கும் மட்டுமில்லை இத்தனை விஷயங்களுக்கு யூஸ் ஆகுதா.!

Advertisement

Salt House Useful Tips in Tamil

உப்பு சமையலுக்கு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சமையலை தவிர வேறு எதற்கு இதனை பயன்படுத்த போகிறோம் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் உப்பில் பல மகிமைகள் ஒளிந்திருக்கிறது. அதை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதவி முழுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.

இரும்பு பொருட்களுக்கு:

வீட்டில் உள்ள இரும்பு பொருட்கள் ஆனது துரு பிடிக்கும். இதனை சரி செய்ய முடியாது என்று அப்படியே போட்டு விடுவோம். இதற்கு உப்பு உதவி செய்கிறது. அதற்கு முதலில் துரு பிடித்த இடத்தில் உப்பை வைத்து தேய்த்து ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த இடத்தை ஒரு 1/2 மணி நேரம் கம்பி நாரை வைத்து தேய்த்து விட்டு கழுவி பாருங்க பளிச்சுன்னு மாறியிருக்கும்.

ஆடை நாற்றம்:

ஆடை நாற்றம்

சில சமயத்தில் நம்முடைய உடையிலிருந்து நாற்றம் அடைக்கும். இதனை சரி செய்வதற்கு கொஞ்சம் தண்ணீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி கொள்ள வேண்டும். இதில் துணியை நினைத்து காய வைத்து கொள்ளுங்கள். துணியிலிருந்து வரும் நாற்றமானது நீங்கியிருக்கும்.

பூச்சிகளை நீக்க:

வேட்டை சுத்தமாக பெருக்கினாலும் சரி, கழுவி விட்டாலும் சரி எறும்புகள் மற்றும் வண்டுகள் மொய்க்கும். அதனை சரி செய்வதற்கு நீங்கள் கழுவி விடும் போது உப்பு கொஞ்சம் கலந்து கொள்ளவும். இதனை பயன்படுத்தி நீங்கள் கழுவி விடும் போது பூச்சிகள் மற்றும் எறும்புகள் வராது.

உங்கள் துணியில் எந்த வித கறை படிந்தாலும் இனி கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்கள் போதும்

டப்பாவில் இருக்கும் அழுக்கு:

டப்பாவில் இருக்கும் அழுக்கு

கண்ணாடி டப்பா அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் நீங்கள் வைத்திருக்கும் பொருட்கள் நீண்ட நாட்களாக வைத்திருந்தால் அவை கறையாக படிந்திருக்கும். இதனை சரி செய்வதற்கு உப்பை டப்பாவில் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ள வேண்டும், 1/2 மணி நேரம் களைத்து கம்பி நாரை வைத்து தேய்த்தால் டப்பா பளிச்சென்று மாறிவிடும்.

காலணி நாற்றம்:

காலணிகளை வாரத்திற்கும் ஒரு முறை கழுவினாலும் கூட அதிலிருந்து நாற்றம் வரக்கூடும். இதனிசரி செய்வதற்கு நீங்கள் உப்பை செப்பல் ஆக இருந்தால் உப்பு தண்ணீர் வைத்து கழுவி விடுங்க. அதுவே ஷுவாக இருந்தால் உப்பை மேலே தெளித்து விட வேண்டும். அதன் பிறகு ஈர துணியை வைத்து துடைத்து விடுங்கள். ஷுவில் இருக்கும் நாற்றம் நீங்கி விடும்.

வெங்காயம் நறுக்கினால்:

வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கும் போது கைகளில் நாற்றம் ஏற்படும். இதனை தவிர்ப்பதற்கு நீங்கள் உப்பு தண்ணீரை வைத்து கையை கழுவுங்கள்.

மீன் தொட்டி:

மீன் தொட்டி

மீன் தொட்டியை நீங்க என்ன தான் தேய்த்து கழுவினாலும் அதிலிருந்து வரும் நாற்றத்தை சரி செய்ய முடியாது. அனால் இதற்கு உப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதாவது மீன் தொட்டியில் உப்பை போட்டு விட வேண்டும். இதன் மூலம் தொட்டிலிருந்து வரும் நாற்றத்தை போக்க முடியும்.

சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் கவலை வேண்டாம்! இப்படி செய்து சரிசெய்யலாம்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement