Nilgiris District Tourist Places in Tamil
சுற்றுலா செல்ல வேண்டும் என்றாலே நாம் அனைவரின் மனதிலேயும் முதலாவதாக நினைவிற்கு வரும் ஒரு இடமான ஊட்டி அமைந்துள்ள மாவட்டமான நீலகிரியில் ஊட்டியை தவிர மேலும் பல அழகான சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அடுத்த முறை நீங்கள் நீலகிரிக்கு சென்றால் இந்த பதிவில் கூறியுள்ள சுற்றுலா தலங்களுக்கெல்லாம் கண்டிப்பாக சென்று வாருங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=> கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
Nilgiris Tourist Places in Tamil:
எங்கு பார்த்தாலும் பச்சை பசுமையாக உள்ள நீலகிரி மாவட்டம் பசுமை விரும்பிகளுக்கு மிகவும் பிடித்த ஒரு மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்திற்கு வருடத்தில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதால் இதனை தமிழ்நாட்டின் முதன்மையான சுற்றுலா தலம் என்றும் கூறுவார்கள். இங்குள்ள சிறப்பான மற்றும் அழகான சுற்றுலா தலங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. பைக்காரா நீர்வீழ்ச்சி:
நாம் முதலாவது பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் பைக்காரா நீர்வீழ்ச்சி தான். இது ஊட்டியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது பைக்காரா என்னும் ஊரில் இருந்து உற்பத்தியாகும் பைக்காரா என்னும் ஆறுதான் பைக்காரா நீர்வீழ்ச்சியாக உள்ளது. கொண்டுள்ளது.
இது நீலகிரியின் மிகவும் அழகான மற்றும் சிறப்பான சுற்றுலா தலங்களில் ஒன்று ஆகும். எனவே இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதனால் அடுத்த முறை நீங்கள் நீலகிரிக்கு சென்றால் இந்த பைக்காரா நீர் வீழ்ச்சிக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஊட்டியில் நீங்கள் எத்தனை இடத்திற்கு சென்றிருந்தாலும் இந்த இடத்திற்கு மட்டும் சென்றிருக்க மாட்டீர்கள்
2. தொட்டபெட்டா மலை:
நாம் இரண்டாவதாக பார்க்கக் கூடிய சுற்றுலா தலம் தொட்டபெட்டா மலை தான். இது ஊட்டியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது நீலகிரியில் உள்ள மலைகளிலேயே மிகவும் உயரமான மலை இந்த தொட்டபெட்டா மலை தான்.
இது 8,500 அடி உயரத்துடன் தமிழ்நாட்டிலேயே மிக உயரமான மலையாகவும், தென்னிந்தியாவில் இரண்டாவது உயரமான மலையாகவும் உள்ளது. எனவே இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதனால் அடுத்த முறை நீங்கள் நீலகிரிக்கு சென்றால் இந்த தொட்டபெட்டா மலைக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
3. சிம்ஸ் பூங்கா (Sims Park):
நாம் அடுத்து பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் சிம்ஸ் பூங்கா தான். இது குன்னூரில் அமைந்துள்ளது. இது குன்னூரின் மிக முக்கியமான மற்றும் முதன்மையான சுற்றுலா தலம் ஆகும்.
எனவே இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதனால் அடுத்த முறை நீங்கள் நீலகிரிக்கு சென்றால் இந்த சிம்ஸ் பூங்காவுக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> திண்டுக்கல் மாவட்டத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு அழகான சுற்றுலா தலங்கள் உள்ளதா
4. முதுமலை வனவிலங்கு காப்பகம்:
நாம் அடுத்து பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் முதுமலை வனவிலங்கு காப்பகம் தான். இது ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவின் முதல் வனவிலங்கு காப்பகமாக விளங்குகின்றது.
இங்கு பல வனவிலங்குகள் உள்ளது அவற்றை காண்பதற்கே பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதனால் அடுத்த முறை நீங்கள் நீலகிரிக்கு சென்றால் இந்த முதுமலை வனவிலங்கு காப்பகத்திற்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
5. கேத்தரின் நீர்வீழ்ச்சி:
நாம் அடுத்து பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் கேத்தரின் நீர்வீழ்ச்சி தான். இது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லக்கூடிய வழியில் அரவேணு என்னும் இடத்தில் அமைந்துள்ள இரட்டை நீர்வீழ்ச்சி ஆகும்.
இது 205 அடி உயரத்தில் இருந்து விழக்கூடிய இந்த அருவி நீலகிரி மாவட்டத்தின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சி ஆகும். எனவே இதனை காண்பதற்கே பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதனால் அடுத்த முறை நீங்கள் நீலகிரிக்கு சென்றால் இந்த கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=>தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் அழகான சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்
6. இரங்கசாமி சிகரம்:
நாம் இறுதியாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் இரங்கசாமி சிகரம் தான். இச்சிகரம் கோத்தகிரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. செங்குத்தான இச்சிகரத்தின் உச்சி வரை யாரும் இதுவரை சென்றது இல்லை.
ஆனால் இதனை காண்பதற்கு பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதனால் அடுத்த முறை நீங்கள் நீலகிரிக்கு சென்றால் இந்த இரங்கசாமி சிகரத்துக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |