Lakshmana Theertham Rameswaram History
பொதுவாக மனிதர்கள், விலங்குகள் மற்றும் கோவில்கள் இவை அனைத்திற்கும் பின்னால் ஒவ்வொரு வரலாறு இருக்கிறது என்று நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் நாம் படிக்கும் வயதில் இருந்து அரசர்களின் வரலாற்றினை பற்றியும் படித்து ஓரளவு தெரிந்துக்கொண்டிருப்போம். ஆனால் நமக்கு தெரியாத நிறைய விஷயங்களுக்கு பின்னால் வெவ்வேறு விதமான கதைகளும், வரலாறுகளும் இருந்து வருகிறது. இத்தகைய வரிசையில் இன்று ராமேஸ்வரம் கோவிலில் லெட்சுமண தீர்த்ததிற்கான வரலாறு பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் வரலாறு |
ராமேஸ்வரம் லெட்சுமண தீர்த்தம் உருவான வரலாறு:
கோவில் தீர்த்தம் என்றாலே அதன் மீது அனைவருக்கும் ஒரு நம்பிக்கை. அதனால் அந்த தீர்த்தத்தினை மிகவும் விலை உயர்ந்த ஒரு வரமாக கருதுகிறார்கள்.
இப்படி இருக்கும் போது ராமேஸ்வரம் கோவில் தீர்த்தம் என்றால் அனைத்தையும் விட பெரிதாக நினைக்கிறார்கள். ஆனால் இந்த ராமேஸ்வரம் லெட்சுமண தீர்த்தத்திற்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது.
அது என்னவென்றால் இராவணன் சீதையை கடத்தி சென்றதால் ராமர் அவரை கொன்று அதன் பின்பு சீதையை மீட்டு அழைத்து வருவார். ராவணனை வதம் செய்த பாவத்தினை கழிப்பதற்காக லெட்சுமணர் உருவாக்கிய தீர்த்த குளம் ஆகும். இது தான் லெட்சுமண தீர்த்தம் உருவான வரலாறு என்று இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.இது மட்டும் இல்லாமல் ராமேஸ்வரத்தில் மொத்தம் 64 தீர்த்த குளங்கள் இடம் பெற்றிருக்கிறது. அத்தகைய குளங்களில் இந்த லெட்சுமண தீர்த்த குளமும் ஒன்றாக இருக்கிறது.
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள 64 தீர்த்த குளங்களில் சில தீர்த்த குளங்கள் மட்டும் ராமநாதசுவாமி திருக்கோவிலின் உள்ளே இருக்கின்ற கோவில் வளாகத்தை சுற்றி காணப்படுகிறது. இந்த தீர்த்தத்திற்கு எதிரே சீதாவின் தீர்த்தம் இடம் பெற்றுருக்கிறது.
ஆனால் லெட்சுமண தீர்த்தம் மட்டும் ராமேஸ்வரத்தில் இருக்கின்றன சிவன் கோவிலில் இடம் பெற்றுள்ளது.
முதலாம் ராஜராஜ சோழனின் வரலாறு |
இதுபோன்று வரலாற்று தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | History in tamil |