நரைமுடி கருப்பாக மாற்ற எளிமையான டிப்ஸ் 

தேவையான பொருட்கள்

நித்தியகல்யாணி இலை – 1 கைப்பிடி அளவு கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு நித்திய கல்யாணி இலையை நன்கு அரைத்து அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.

பின்னர் அந்த சாற்றுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய்யை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு நாம் தயாரித்து வைத்துள்ள கலவையை தலைமுடியின் வேரில் படுமாறு  தடவி 1 – 2 மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலையில் உள்ள நரைமுடியை வேரிலிருந்து கருமையாக மாற்றி கொள்ளலாம்.