தமிழர்களின் ஆடி 18 வாழ்த்துக்கள்
வணக்கம் நண்பர்களே. பொதுநலம்.காமின் அன்பான நேயர்களே. இன்று நம் பதிவில் ஆடி 18 ஆம் பெருக்கு நன்னாளை பற்றி தான் பார்க்கப்போகிறோம். ஆடி பெருக்கு என்பது நம் தமிழர்களால் ஆடி மாதம் 18 ஆம் நாளன்று கொண்டாடப்படும் விழா ஆகும். இதை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைப்பார்கள். நம் முன்னோர்கள் தமிழ் விழாக்களை நாள்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. விண்மீன்களையும், கிழமைகளையும் அடிப்படையாக கொண்டு ஆடி பெருக்கு நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நம் தமிழர்களால் நடத்தப்படும் ஒரே விழா ஆடி பெருக்காகும்.
ஆடி மாதத்தில் பருவமழை பெய்வதும் ஆறு, குளம், ஏரிகள் தண்ணீரால் நிரம்பி பயிர்கள் செழிப்பாக இருக்கக்கூடிய மாதம் தான் ஆடி மாதம். அதனால் தான் ஆடி மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. புது வெள்ளம் பெருகுவதால் ஆடி பெருக்கு என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். உள்ளவர்கள் இந்த நன்னாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது அவர்கள் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அவற்றை அறுவடை செய்யமுடியும். இதனால் தான் நம் முன்னோர்கள் “ஆடி பட்டம் தேடி விதை” என்று கூறியுள்ளார்கள்.
ஆடி பெருக்கு வாழ்த்துக்கள்:
அனைவரின் வீட்டிலும்
வளமும் செல்வமும்
பெருகட்டும் …
இனிய ஆடி பெருக்கு
நல்வாழ்த்துக்கள்…
ஆடி 18 வாழ்த்துக்கள்:
அளவில்லா அன்பும்..
குறைவில்லா செல்வமும்..
பெருகி,
நலமுடன் வாழ
இனிய ஆடி பெருக்கு
நல்வாழ்த்துக்கள்…
ஆடி 18 வாழ்த்துக்கள் |
பதினெட்டாம் பெருக்கு வாழ்த்துக்கள்:
உங்கள் இல்லங்களில்
உள்ள கவலை என்னும்
இருள் மறைந்து…
மகிழ்ச்சி என்னும்
ஒளி பெருக…
இனிய ஆடி பெருக்கு
நல்வாழ்த்துக்கள்…
இனிய ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள்:
அன்பான உள்ளம்
கொண்ட அனைவருக்கும்…
இனிய ஆடி பெருக்கு
நல்வாழ்த்துக்கள்…
Aadi Perukku Wishes In Tamil:
என் இனிய
சொந்தங்கள்
அனைவருக்கும்…
ஆடி பெருக்கு
நல்வாழ்த்துக்கள்…
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |