Maha Dhana Raja Yoga Palangal in Tamil
பொதுவாக நம்மில் பலருக்கும் ஜோதிட சாஸ்திரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதனால் நாம் அதில் கூறும் அனைத்தையும் நம்புவோம். அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களும் நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கின்றது. அவற்றால் தான் நமது வாழ்க்கை இயக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அதனால் நவகிரகங்கள் தங்களது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றம் செய்தால் நமது வாழ்க்கையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் தான் குரு தனது ராசியை மாற்றி மேஷ ராசிக்கு வந்துள்ளது. மேலும் சுக்கிரனும் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இவ்விரண்டு கிரகங்களின் சேர்க்கையால் மகா தன ராஜயோகம் மேஷராசியில் உருவாகியுள்ளது. இந்த ராஜ யோகத்தின் பலன் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் கிடைக்கும். ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு கூடுதலான பலன்கள் கிடைக்கும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையெல்லாம் பற்றி விரிவாக இன்றைய பதிவில் காணலாம் வாங்க..
குருவின் நட்சத்திர மாற்றத்தால் டாப் லெவலுக்கு செல்லப்போகும் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்
மேஷத்தில் உருவாகியுள்ள மகா தன ராஜயோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நினைய போகும் 3 ராசிக்காரர்கள்:
ரிஷப ராசி:
ரிஷப ராசியின் பனிரெண்டாவது வீட்டில் உருவாகியுள்ள இந்த மகா தன ராஜயோகத்தால் பலவகையான நல்ல பலன்கள் கிடைக்க போகின்றது. நீங்கள் விரும்பிய அனைத்தும் நிறைவேறும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு அதிக அளவு லாபம் கிடைக்கும் இதனால் உங்களின் பொருளாதார நிலை உயரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். மேலும் நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் நிறைவேறும்.
சிம்ம ராசி:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மகா தன ராஜயோக பல நல்ல பலன்களை அளிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அபரிவிதமான முன்னேற்றம் ஏற்படும். அதேபோல் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
நிதிநிலை சிறப்பாக காணப்படும். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடையும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
மகர ராசி:
அனைத்து துறையில் உள்ள மகர ராசிக்காரர்களுக்கும் இந்த மகா தன ராஜயோகத்தால் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக அளவு முன்னேற்றம் ஏற்படும். இதனால் உங்களின் வருமானம் அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |