மோர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே ஆரோக்கியத்தில் அதிக கவனம் இருக்கும். அதிலும் தற்போது வேற வெயில் காலம் வேற வந்துவிட்டது. வெயில் நம்மை வைத்து தாண்டவம் ஆடுகிறது என்றே சொல்லலாம்.
ஆகவே நாமும் இந்த வெயில் காலத்தில் இருந்து தப்பிக்க என்ன ஜூஸ் வகைகள் அதிகமாக குடித்து வருகின்றோம். அப்படி உடல் சூட்டை தணிக்க நமக்கு உதவும் பானங்களில் ஓன்று தான் மோர். அதிலும் இந்த வெயில் காலத்தில் மக்கள் அதிகமாக பருகும் பானம் என்றே சொல்லலாம். அதுபோல மோர் குடிப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
மோர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன..?
பொதுவாக என்ன தான் மோர் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைத்தாலும், அதிலும் பக்கவிளைவுகள் இருக்கின்றது. நாம் வெயில் காலத்தில் அளவுக்கு அதிகமாக மோர் குடிப்பதால் நம் உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதை பற்றி தற்போது காணலாம்.
சுவாச பிரச்சனைகள்:
பொதுவாக மோர் குடிப்பதால், பலருக்கும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வருவது சகஜம் தான். ஆனால், நாம் வெறியில் நேரத்தில் அதிகப்படியாக மோர் குடிக்கும் போது அதில் இருக்கும் அதிகப்படியான நுகர்வு, நமக்கு சுவாச கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அதனால் இரவு நேரங்களில் மோர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
தூக்கத்தை பாதிக்கிறது:
நாம் வெயில் நேரத்தில் மோர் குடிக்கும் போது அது நமக்கு சளி தொந்தரவுகளை தருவதோடு தலைவலி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், இரவு நேரத்தில் சிறுநீர்போக்கு அதிகரிக்கிறது. இதனால் தூக்கமின்மை கோளாறுகள் உண்டாகின்றன.
சிறுநீரக பாதிப்பு:
பொதுவாக மோரில் இருக்கும் அதிகப்படியான சோடியம் சிறுநீரக பாதியில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சிறுநீரகத்தில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
தொண்டை வலி:
மோர் குடிப்பதால் பலருக்கும் சளி தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இதனால் தொண்டை மற்றும் மார்பு பகுதியில் தேங்கும் சளியால் தொண்டையில் வலி மற்றும் நெரிசல் போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.
வாயு கோளாறுகள்:
பெரும்பாலும் மோர் என்றாலே புளிப்பு தன்மை வாய்ந்ததாக தான் இருக்கும். அப்படி புளித்த மோரில் இருக்கும் அதிகபடியான நுகர்வு வயிற்றில் வாயு தேக்கத்திற்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக வயிற்றில் வலி மற்றும் வயிற்றின் அடிப்பகுதியில் சதை பிடிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், மோர் குடிப்பதால் வயிற்று போக்கு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
இரத்த அழுத்தம் ஏற்படுகிறது:
மோரில் இருக்கும் அதிகப்படியான சோடியமானது இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இது உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். அதனால் இரத்த அழுத்த பிரச்னைகள் உள்ளவர்கள் மோர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது:
மோரில் இருக்கும் அதிகப்படியான சோடியமானது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக இதய கோளாறுகள் உண்டாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |