Best Hair Pack for Hair Growth in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக நமது தலை முடிக்கு அநேக பிரச்சனைகள் வந்து அது மிகவும் பாதிப்படைந்து அதன் வளர்ச்சியும் குறைகிறது. ஆனால் நமது முன்னோர்களின் காலத்தில் இப்படி ஒரு பிரச்சனையே ஏற்படவில்லை. அன்றைய சூழலில் அனைவருக்குமே நீளமான தலைமுடி இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை ஆகியவை தான்.
மேலும் அவர்கள் தங்களின் அழகினை மேம்படுத்தி கொள்ள எந்த ஒரு வேதிப்பொருட்கள் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்தவில்லை. மாறாக அவர்கள் தங்களின் அழகினை மேம்படுத்த இயற்கையான முறைகளையே கையாண்டார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் தலை முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Homemade Hair Pack for Hair Growth in Tamil:
இயற்கையான முறையில் உங்களின் தலை முடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காணலாம். முதலில் இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பற்றி பார்க்கலாம்.
- செம்பருத்தி பூ – 4
- செம்பருத்தி இலை – 1 கைப்பிடி அளவு
- கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- துளசி – 1 கைப்பிடி அளவு
- கற்றாழை ஜெல் – 4 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
- சீயக்காய் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
- டீ தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ வளரவே வளராதுன்னு நெனச்ச முடியை கூட அடர்த்தியாக வளர வைக்க இந்த ஒரு பொருள் மட்டும் போதும்
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் 4 செம்பருத்தி பூ, 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலை, 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை, 1 கைப்பிடி அளவு துளசி, 4 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் டீ தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசை போல் அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொள்ளுங்கள்.
நெல்லிக்காய் பொடியை சேர்த்து கொள்ளவும்:
பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ 30 நிமிடத்தில் உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
சீயக்காய் பொடியை கலந்து கொள்ளவும்:
பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் சீயக்காய் பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
தேங்காய் எண்ணெயை சேர்க்கவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து உங்கள் தலை முடியின் வேரில்படுமாறு தடவி 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.
இதனை வாரம் இரு முறை என ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலைமுடி நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்வதை நீங்களே காணலாம்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ 2 நாட்களில் உங்க முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் மறைய வேண்டுமா அப்போ துளசியுடன் இதை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |