How to Remove Sun Tan from Face Home Remedies in Tamil
பொதுவாக இன்றைய கால கட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக அனைவரின் முகமும் மிகவும் கருமையாக மாறி விடும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் சொல்லவா வேண்டும் சாதாரண நாட்களை விட கோடை காலத்தில் அதிகமாக முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும். அதனை போக்குவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு கைகொடுத்திருக்காது.
அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் கோடை காலத்தில் ஏற்படும் Sun Tan-னை போக்க உதவும் ஒரு குறிப்பினை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Remove Sun Tan from Face Naturally in Tamil:
இயற்கையான முறையில் கோடை காலத்தில் ஏற்படும் Sun Tan-னை போக்க உதவும் ஒரு குறிப்பினை அறிந்து கொள்ளலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- தேன் – 2 டேபிள் ஸ்பூன்
- ஆவாரம்பூ பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- மைசூர் பருப்பு பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- பால் – 1 டேபிள் ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 30 நிமிடத்தில் உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஆவாரம்பூ பொடியை கலக்கவும்:
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் ஆவாரம்பூ பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
மைசூர் பருப்பு பொடியை சேர்த்து கொள்ளவும்:
பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பு பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரே வாரத்தில் உங்களின் பாத வெடிப்பு நீங்க தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க போதும்
பாலை கலந்து கொள்ளவும்:
பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் பாலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கற்றாழை ஜெல்லினை சேர்க்கவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லினை கலந்து உங்களின் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து உங்களின் முகத்தை நன்கு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
இதனை தினமும் அல்லது வாரத்திற்கு இரு முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்கள பாத்து மத்தவங்க எப்படிங்க இவ்ளோ முடியை வளர்த்தீங்கனு கேட்கிற அளவுக்கு தலைமுடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |