நிலவுக்கும் உங்களுக்கும் போட்டி வைத்தால் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள்..! அந்த அளவிற்கு கலராக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

Face Whitening Naturally Tips At Home in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆண்கள் அந்தளவிற்கு அதில் கவனம் செலுத்தமாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி கிடையாது. அழகை மேம்படுத்துவதற்காகவே அதிக நேரத்தை செலவிடுவார்கள். அதுபோல முகம் எப்பொழுதும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.

அதனால் நாளடைவில் சருமத்தில் மேலும் பாதிப்புகள் வருகின்றது. அதனால் இனி கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி பாயன்படுத்துவதை விட்டுவிட்டு, வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை பயன்படுத்தினால் நிலவை விட அழகாக ஜொலிக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Face Whitening Naturally Tips At Home in Tamil: 

  1. அரிசி – 3 ஸ்பூன்
  2. காய்ச்சாத பால் – 2 ஸ்பூன்
  3. தேங்காய் எண்ணெய் – 6 சொட்டுகள்

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அரிசி எடுத்து கொள்ளவும்:

அரிசி எடுத்து கொள்ளவும்

முதலில் பாத்திரத்தில் 3 ஸ்பூன் அல்லது உங்கள் முகத்தில் தேவையான அளவு அரிசி எடுத்து கொள்ள வேண்டும்.

பின் அதை நன்றாக கழுவி கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, அரிசியை போட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். அரிசி ஒரு பதத்திற்கு வெந்து வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

உங்கள் முடி கட்டுக்கடங்காமல் காடு போல வளர இதை மட்டும் தடவுங்க போதும்

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்: 

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்

அடுத்து ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும். அதில் நாம் வடித்து எடுத்து வைத்துள்ள சாதத்தை போட்டு நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும்.

பின் நாம் அரைத்த பேஸ்டை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொள்ள வேண்டும். அடுத்து அதில் 2 ஸ்பூன் அளவிற்கு காய்ச்சாத பால் சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் 6 சொட்டுகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது முகத்தை வெள்ளையாக மாற்றும் இயற்கையான பேஸ்ட் தயாராகிவிட்டது.

அளந்து பார்த்தாலும் அளவிட முடியாத அளவிற்கு முடி வளர இந்த 1 பொருளை மட்டும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து தடவுங்க போதும்

பயன்படுத்தும் முறை:

இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் முகத்தை சுத்தமான நீரில் கழுவி ஈரப்பதம் இல்லாமல் துடைக்க வேண்டும்.

பின் நாம் தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடம்  நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் 20 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும்.

இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் 7 நாட்களில் உங்கள் முகம் வெள்ளையாக மாறுவதை நீங்களே காண்பீர்கள்.

முன் நெற்றியில் முடி ஏறிக்கொண்டே செல்கிறது என்று கவலைப்படுபவர்கள் இந்த மட்டும் ட்ரை பண்ணுங்க போதும் 

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil