30 Days Hair Growth Challenge in Tamil
என்னப்பா பன்றது என்ன செய்தாலும் முடி வளராமல் இருக்கிறது. கருமையாக இல்லாமல் இருக்கிறது என்று நிறைய பிரச்சனைகள் உள்ளது. இதற்கு என்னதான் தீர்வு என்று நாமும் நிறைய ஷாம்பு, சீயக்காய் என்று நிறைய மாற்றி மாற்றி பயன்படுத்தி பார்த்து அதுவும் சரியாக ரிசல்ட் தரவில்லை. இருக்கின்ற முடி தான் கொட்டிக்கொண்டு இருக்கிறது என்று சொல்லி புலம்புபவரா நீங்கள்..!
நாம் பொதுவாக சில தவறுகளை அடிக்கடி செய்கிறோம். அது என்னவென்றால் குளிக்கும் போதும் சரி, அல்லது குளித்த பின்பு அல்லது தலையை சீவும் போதும் சரி நிறைய தவறுகளை செய்து வருகிறோம். அதனால் தான் தலை முடி உதிர்ந்தும் மெலிந்து கொண்டும் போகிறது. இந்த பதிவின் வாயிலாக அதற்கான தீர்வையும், சில தவறுகளை பற்றியும் பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How To Grow Hair Faster Naturally in A Week in Tamil:
நம் குளிக்கும் போது தலைமுடியில் ஷாம்பு அப்படியே பயன்படுத்த கூடாது. அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து அதன் பின்பு தலை குளிக்கவேண்டும். அதேபோல் முக்கியமாக தலை குளித்து வந்தபிறகு தலையை அப்படியே போட்டு அடித்து அதனை துன்புறுத்த கூடாது.
மேலும் முக்கியமாக சொல்லப்போனால் குளித்துவிட்டு தலையை அப்படியே பின்னி கொண்டு செல்வது இதுபோன்ற தவறுகளை செய்வதால் தலை முடி உதிர்ந்துகொண்டு போகிறது. சரி இதற்கு என்னதான் தீர்வு முடி உதிராமல் இருக்க ஒரு தீர்வை பற்றி பார்க்கலாம் வாங்க..!
செய்முறை:
முதல் நாள் இரவே தண்ணீரில் 4 டேபிள் ஸ்பூன் உளுந்தை ஊறவைத்து கொள்ளுங்கள். வெறும் தண்ணீரில் கூட ஊற வைக்கலாம் அல்லது கஞ்சி தண்ணீர், சாதம் வடித்த கஞ்சியில் ஊற்றி ஊறவைக்கவும்.
உளுந்தில் நிறைய சத்துக்கள் உள்ளது. அதில் மெக்னீசியம், புரதம், உள்ளது அதுமட்டுமில்லாமல் இதை ஒரு ஹேர் பேக் போல் பயன்படுத்தும் போது அதில் இருக்கும் சத்துக்கள் தலை முடியை வலிமையாக வைக்கும்.
முதலில் இந்த உளுந்தை ஒரு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு அதில் தேங்காய் பால் சேர்க்கவும். அதாவது தேங்காய் திருவி அதை அரைத்து அதில் இருக்கும் பாலை சேர்க்கவும்.
அடுத்து விளக்கெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் எடுத்துகொள்ளவும். இது மூன்றையும் நன்கு அரைத்து அதை அப்படியே கலந்துகொள்ளவும். இப்போது அருமையான ஹேர் பேக் ரெடி.
இவ்வளவு கருமையான முடியா அப்படினு சொல்ற அளவிற்கு நரை முடியை கருமையாக மாற்றும்
பயன்படுத்தும் முறை:
ஹேர் பேக் பயன்படுத்துவதற்கு முன்பு தலையில் எண்ணெய் வைத்துக்கொள்ளவும். அதை முதல் நாள் வைத்துக்கொண்டால் மிகவும் நல்லது. சரி இப்போது ஹேர் பேக் அப்ளை செய்யும் போது வேரிலிருந்து அப்ளை செய்யவேண்டும். அதன் பிறகு தலை முடியை ஷாம்பு சீயக்காய் போட்டு குளிக்கலாம்.
வெறும் 2 நிமிடத்தில் நரை முடி கருமையாக மாறும் மாதம் ஒரு முறை தேய்த்தால் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |