முருகன் விரதங்கள்
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பொதுநலம். காம் பதிவில் முருகனுக்கு விரதம் இருக்கும் முறைகளை பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். பொதுவாக முருக பெருமானுக்கு முக்கியமான விரதங்கள் என்று மூன்று விரதங்கள் உள்ளன. அதாவது வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம் என்று மூன்று விரதகங்கள் உள்ளன.
இதில் வார விரதம் என்பது செவ்வாய் கிழமையில் மட்டும் இருப்பதாகும். நட்சத்திர விரதம் என்பது கார்த்திகையில் விரதம் இருப்பதாகும். திதி விரதம் என்பது சஷ்டியில் மட்டும் இருக்க கூடிய விரதமாகும். மேலும் முருகனுக்கு விரதங்கள் எப்படி இருப்பது, அவருக்கு உகந்தவை எதுவென்றும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கார்த்திகை விரதம் இருப்பது எப்படி? |
முருகனுக்கு எந்தெந்த நாட்களில் விரதம் இருக்கலாம்:
முருகனுக்கு சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற நாட்களில் விரதம் இருக்கலாம். மேலும், கிருத்திகை நட்சத்திரம் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும் விரதம் இருக்கலாம்.
முருகனுக்கு விரதம் இருக்கும் முறை | முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் முறை
விரதம் இருப்பவர்கள் உபவாசமாக இருக்கலாம், முடியாதவர்கள் காலை உணவை மட்டுமோ அல்லது பகல் உணவை மட்டுமே தவிர்த்து விரதம் இருக்கலாம், அல்லது ஒரு வேளை பழம் மட்டும் சாப்பிட்டும், பகல் பொழுதில் உப்பு இல்லாமலும் உணவு சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரத நாளில் தலைக்கு குளித்து விட்டு, முருகனுக்கு வெள்ளை நிற பூக்கள் சூட்டி, முருகனுக்குரிய பாடல்கள் பாடி விரதம் இருக்கலாம்.
காலையில் பால், பழம், வெற்றிலை பாக்கு மட்டும் படைத்து வழிபட வேண்டும். காய்ச்சிய பாலில் சர்க்கரை அல்லது தேன் கலந்து படைக்க வேண்டும். இந்த பாலை நீங்களே குடித்து விடலாம். முடிந்தால் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபடலாம்.
முருகனுக்கு விளக்கு ஏற்றும் முறை:
மாலையில் மீண்டும் வீட்டில் பால், பழம் படைத்து, ஒரு மனைப்பலகையில் கோலமிட்டு, அதில் 6 அகல் விளக்கில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். ஆறு விளக்குகளில் ஒரு விளக்காவது நெய் விளக்காக ஏற்றுவது சிறப்பு. சுவாமிக்கு படைத்த பாலை நீங்களே குடித்து விட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
முக்கியமாக பூஜை செய்யும் முருகனுக்கு உகந்த திருப்புகழ் கந்த சஷ்டி கவசம், ஓம் சரவண பவ போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கூற வேண்டும். நெனெகல் முருகனை மனதார நினைத்து அவர் பார்த்து கொள்வார் என்று நினைத்து வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு முருகன் அருள்புரிவார்.
முருகன் வணங்கும் முறை:
பொதுவாகவே முருகனுக்கு கார்த்திகை, சஷ்டி, தைப்பூசம் போன்ற விரதங்கள் எடுக்கும் பொழுது. கோவிலுக்கு சென்று வந்த பிறகு வீட்டிற்கு வந்ததும் பால் அல்லது பழச்சாறுகள் மற்றும் அருந்தி. வீட்டில் இருக்கும் முருகப்பெருமான் படத்திற்கு விளக்கு ஏற்றிவைத்து, பூக்களால் அலங்காரம் செய்து, கந்த சஷ்டிக் கவசத்தை படித்து வருவது நல்லது. அதன் பிறகு மாலை 6 மணிக்கு மேல் முருகன் கோவிலுக்கு சென்று விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.
இதேபோல் ஒன்பது செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பதால், செவ்வாய் தோஷம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
முருகன் வழிபாடு நன்மை:
முருகனுக்கு விரதம் இருப்பதால் நிலம் வாங்குவது, வீடு கட்டுவது, வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பது, திருமணமாகி நீண்ட நாள் குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், அதுமட்டுமின்றி ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்குவதற்கு முருகனுக்கு விரதம் இருந்து வழிபடுவது நல்லது.
கல்யாண வரன் அமையும், உடல் நோய்கள் குணமாகும், படிப்பு, வேலை ஆகியவற்றில் பிரச்சனைகள் தீரும், மன வலிமை அதிகரிக்கும், வாழ்வில் வளமும், நலமும் அதிகரிக்கும.
முருகனுக்கு மாலை அணியும் நாட்கள்:
சஷ்டி திதி, கிருத்திகை மற்றும் விசாகம் நட்சத்திரம், செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் மாலை அணிந்து கொள்ளலாம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |